மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த நடிகர் சூரியின் கருப்பன் காளை யாராலும் அடக்கப்படாமல் வெற்றி பெற்றது.
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டியை காண உதயநிதியின் மகன் இன்பநிதியும் வந்திருந்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கோயில் காளைகளுக்கு துணை முதல்வர் பரிசுகளை வழங்கினார்.
10 சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை காளைகள் முட்டியதில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 6 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 4 பேரும், பார்வையாளர்கள் 3 பேரும் ஆக மொத்தம் 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இன்று நடைபெறும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெரும், காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கார், டிராக்டர், ஆட்டோ, பைக், தங்ககாசு உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதனால் போட்டியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், சுமார் 1000 காளைகளும், 750 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற காளைகள் ஒவ்வொன்றாக மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வாடிவசால் வழியாக அவித்துவிடப்பட்டது. நடிகர் சூரியின் காளை கருப்பன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. இதில் நடிகர் சூரியின் காளை யாராலும் அடங்கப்படாத காரணத்தினால் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளையும் வாடிவாசலில் சிறப்பான ஆட்டத்தை காண்பித்து பரிசை தட்டிச் சென்றது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}