வீரரை சுழற்றியடித்து.. வாகை சூடிய நடிகர் சூரியின் காளை கருப்பன்.. அலங்காநல்லூரில் அதிரடி!

Jan 16, 2025,04:46 PM IST

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த நடிகர் சூரியின் கருப்பன் காளை யாராலும் அடக்கப்படாமல் வெற்றி பெற்றது.


உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டியை காண உதயநிதியின் மகன் இன்பநிதியும் வந்திருந்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கோயில் காளைகளுக்கு துணை முதல்வர் பரிசுகளை வழங்கினார். 


10 சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை காளைகள் முட்டியதில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.  மாடுபிடி வீரர்கள் 6 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 4 பேரும், பார்வையாளர்கள் 3 பேரும் ஆக மொத்தம் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். 




இன்று நடைபெறும்  போட்டியில் பங்கேற்று வெற்றி பெரும், காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கார், டிராக்டர், ஆட்டோ, பைக், தங்ககாசு உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதனால் போட்டியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், சுமார் 1000 காளைகளும், 750 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.


போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற காளைகள் ஒவ்வொன்றாக மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வாடிவசால் வழியாக அவித்துவிடப்பட்டது. நடிகர் சூரியின் காளை கருப்பன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. இதில் நடிகர் சூரியின் காளை யாராலும் அடங்கப்படாத காரணத்தினால் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளையும் வாடிவாசலில் சிறப்பான ஆட்டத்தை காண்பித்து பரிசை தட்டிச் சென்றது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

news

ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்