மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிலையை நடிகர் சூரி பரிசளித்துள்ளார்.
மதுரை பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. ஜல்லிகட்டிற்காக 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, விழா கமிட்டி சார்பாகவும், ஊர் பொதுமக்கள் சார்பாகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு வந்திருந்த மதுரை மண்ணின் மைந்தரான நடிகர் சூரி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து, வீரத்தின் அடையாளமாக விளங்கும் ஒரு அழகான வெண்கலக் காளை சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.
நடிகர் சூரி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வார். இந்த ஆண்டு துணை முதலமைச்சருக்கு சிலை வழங்கியதன் மூலம் தனது கலாச்சாரப் பற்றை வெளிப்படுத்தியுள்ளார். வாடிவாசலில் இருந்து துள்ளி வந்த காளைகளுக்குத் தங்கக் காசுகள் மற்றும் பல்வேறு பரிசுகளை வழங்கி துணை முதலமைச்சர் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
{{comments.comment}}