சென்னை: நடிகரும், காமெடி நடிகருமான சூரி, இன்று ஜனநாயக உரிமையை செலுத்துவதற்காக வந்த இடத்தில் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டது. என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் கூறியது மன வேதனையாக உள்ளது என்று சூரி கூறியுள்ளார்.
இது யாருடைய தவறு என்பது தெரியவில்லை. அடுத்த தேர்தலில் என்னுடைய ஓட்டை நான் செலுத்துவேன் என நம்புகிறேன் என மனவேதனையுடன் பேசி உள்ளார் நடிகர் சூரி.
இன்று நடிகர் நடிகைகள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை செலுத்தி தனது ஜனநாயக கடமையை ஆற்றி விட்டதாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூரி இன்று தனது வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்கு மையத்திற்கு சென்றார். அப்போது அங்கு நடிகர் சூரியின் பெயர் விடுபட்டதாக கூறியுள்ளனர். இது பற்றி நடிகர் சூரி வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
என் ஜனநாயக உரிமையை செலுத்துவதற்காக வந்தேன். கடந்த எல்லா தேர்தலிலும் என்னுடைய ஓட்டை பதிவு செய்து வருகிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்ல என்னுடைய பெயர் விடுபட்டுப்போச்சு என சொல்றாங்க. என் மனைவியின் பெயருக்கு ஓட்டு இருக்குது. என் பெயருக்கு இல்லை. என் பெயர் விடுபட்டுப் போச்சுன்னு சொல்றாங்க. இருந்தாலும் 100% ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை என நினைக்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. இது எங்க யாருடைய தவறு என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டுப் போட்டுவிட்டு ஓட்டு போடவில்லை என சொல்வதை விட, ஓட்டு போட முடியவில்லை என்ற வேதனையுடன் சொல்கிறேன். தயவுசெய்து நூறு சதவீதம் ஓட்டு போடுங்க. ஓட்டு போடுவது ரொம்ப முக்கியம். நாட்டுக்கு நல்லது. தவறாமல் வாக்களியுங்கள். நான் அடுத்த தேர்தலில் என்னுடைய ஓட்டை செலுத்துவேன் என நம்புகிறேன் என மனவேதனையுடன் கூறியுள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}