சென்னை: "மிஸ்டர் கனியன், ஹாய் கனியன், நல்லா இரு, வாழ்க நீ " என்று தன் ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக உள்ள குமரன் என்பவருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டி கொஞ்சினார் நடிகர் விஜய் சேதுபதி.
மகாராஜா வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இவரது இயல்பான நடிப்பு, சாதாரணமாக பழகும் குணம் பலரையும் கவர்த்ததால் தனித்தன்மையுடன் திகழ்ந்து வருகிறார். இவரை பார்க்கும் நடிகர்களாக இருந்தாலும் சரி, ரசிகர்களாக இருந்தாலும் சரி பார்த்தவுடன் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்து அவர்களின் அன்பை எளிதில் பெற்று விடுவார்.
சிறு உதவி செய்தாலும் தற்போது தம்பட்டம் அடிப்பவர்களுக்கு மத்தியில், செய்யும் உதவியை வெளியில் அதிகளவில் காண்பிக்க விரும்பாதவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் ஒரு இயக்குனர் இறந்து விட்டார். அங்கு போன விஜய் சேதுபதி இயக்குனரின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு பணம் கொடுத்து உதவியதுடன் இதை யாரிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்திருந்த நிலையில், இயக்குனரின் குடும்பத்தினர் அது குறித்த செய்தியை தெரிவித்துவிட்டனர். இப்படி பலர் பேர்களுக்கும் வெளியில் தெரியாமல் உதவி செய்து வருபவர் விஜய் சேதுபதி.
பல நல்ல குணநலன்களை தன்னகத்தே பெற்றுள்ள இவர், தன்னுடைய பிசியான படப்பிடிப்புக்கு மத்தியில் அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தித்தும் வருகிறார்.இந்நிலையில், விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக உள்ள குமரன் என்பருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை மருத்துவமனைக்கே நேரில் சென்று பார்த்ததுடன், குழந்தையை வாங்கி மார்போடு அனைத்து கனியன் என பெயர் சூட்டியுள்ளார். அத்துடன் குழந்தைக்கு முத்தமிட்டு நல்லா இரு ... வாழ்க நீ என்றும், கையில் ஏந்தியபடி கனியனை கொஞ்சி விளையாடி வாழ்த்தினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி தற்போது வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}