சென்னை: நடிகைக்கு கவர்ச்சி அவசியம். ஒரு நடிகை அழகா இருந்தா அதை கொண்டாடணும்.. இதுல என்ன தப்பு இருந்திட போகுது.. என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருகிபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தமிழ் சினிமாவில் முதலில் ஒரு பாடகியாக அறிமுகமாகி பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர். இவர் சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல் பாப் பாடல்களிலும் சிறந்த விளங்கி வருகிறார். தற்போது வயது 40 ஆக இருந்தாலும் இவர் இன்றும் இளமையாவே இருக்கிறார். இவர் இன்று வரை திருமணம் செய்யவில்லை.
தினத்தந்திக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. அதில் மனம் விட்டுநிறைய சொல்லியுள்ளார். அதிலிருந்து சில..

பச்சைக்கிளி முத்துச்சரம் படம் தான் எனக்கு முதல் படம். அந்த நேரத்தில் நான் அமெரிக்காவில் மியூசிக் கோர்ஸ் படிக்க ரெடியா இருந்தேன். நான் மிடில் கிளாஸ் ஃபேமிலி. அதனால இந்தப் படம் நடிச்சா காசு கிடைக்கும் என நினைத்து இந்தப் படத்தில் நடிச்சேன். ஆனா இப்போ நிலைமை வேற மாதிரி ஆயிடுச்சு.
நான் நடித்த நடிகர்களில் கமல்ஹாசனும் கார்த்தியும் எனக்கு பிடித்தவர்கள். விஸ்வரூபம், ஆயிரத்தில் ஒருவன் படத்தை என்னால் மறக்கவே முடியாது. நான் பாடிய பாடலில் கோவா படத்தில்.. இதுவரை இல்லாத உணர்விது.. என்ற பாடல் எனக்கு பிடிக்கும்.
நடிகைகளுக்கு கவர்ச்சி நிச்சயமாக அவசியம் தான். கவர்ச்சி காட்டாத நடிகைகளை தப்பு சொல்ல முடியாது. ஆனால் அவங்களுக்கு வாய்ப்பு கொஞ்சம் தான் இருக்கும். ஏன்னா சில கதைக்கு கவர்ச்சி தேவையா இருக்கும். அந்த சமயம் கவர்ச்சி காட்டாத நடிகைகள் முகம் கண்ணுக்கு தெரியாமல் போய்விடும். ஒரு பெண் அழகாக இருந்தால் அதை கொண்டாடனும். இதுல என்ன தப்பு இருந்திட போகுது.
கல்யாணம் பண்ணனும்.. அதுக்கு ஒரு நல்ல ஆண் தான் வேணும். நேர்மையான நல்ல ஆள் கிடைக்கட்டும். பார்க்கலாம் என்று கலகலப்பாக பேசியுள்ளார் ஆண்ட்ரியா.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}