சென்னை: நடிகைக்கு கவர்ச்சி அவசியம். ஒரு நடிகை அழகா இருந்தா அதை கொண்டாடணும்.. இதுல என்ன தப்பு இருந்திட போகுது.. என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருகிபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தமிழ் சினிமாவில் முதலில் ஒரு பாடகியாக அறிமுகமாகி பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர். இவர் சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல் பாப் பாடல்களிலும் சிறந்த விளங்கி வருகிறார். தற்போது வயது 40 ஆக இருந்தாலும் இவர் இன்றும் இளமையாவே இருக்கிறார். இவர் இன்று வரை திருமணம் செய்யவில்லை.
தினத்தந்திக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. அதில் மனம் விட்டுநிறைய சொல்லியுள்ளார். அதிலிருந்து சில..

பச்சைக்கிளி முத்துச்சரம் படம் தான் எனக்கு முதல் படம். அந்த நேரத்தில் நான் அமெரிக்காவில் மியூசிக் கோர்ஸ் படிக்க ரெடியா இருந்தேன். நான் மிடில் கிளாஸ் ஃபேமிலி. அதனால இந்தப் படம் நடிச்சா காசு கிடைக்கும் என நினைத்து இந்தப் படத்தில் நடிச்சேன். ஆனா இப்போ நிலைமை வேற மாதிரி ஆயிடுச்சு.
நான் நடித்த நடிகர்களில் கமல்ஹாசனும் கார்த்தியும் எனக்கு பிடித்தவர்கள். விஸ்வரூபம், ஆயிரத்தில் ஒருவன் படத்தை என்னால் மறக்கவே முடியாது. நான் பாடிய பாடலில் கோவா படத்தில்.. இதுவரை இல்லாத உணர்விது.. என்ற பாடல் எனக்கு பிடிக்கும்.
நடிகைகளுக்கு கவர்ச்சி நிச்சயமாக அவசியம் தான். கவர்ச்சி காட்டாத நடிகைகளை தப்பு சொல்ல முடியாது. ஆனால் அவங்களுக்கு வாய்ப்பு கொஞ்சம் தான் இருக்கும். ஏன்னா சில கதைக்கு கவர்ச்சி தேவையா இருக்கும். அந்த சமயம் கவர்ச்சி காட்டாத நடிகைகள் முகம் கண்ணுக்கு தெரியாமல் போய்விடும். ஒரு பெண் அழகாக இருந்தால் அதை கொண்டாடனும். இதுல என்ன தப்பு இருந்திட போகுது.
கல்யாணம் பண்ணனும்.. அதுக்கு ஒரு நல்ல ஆண் தான் வேணும். நேர்மையான நல்ல ஆள் கிடைக்கட்டும். பார்க்கலாம் என்று கலகலப்பாக பேசியுள்ளார் ஆண்ட்ரியா.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}