மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினி வயலில் இறங்கி கதிர் அறுத்து போஸ் கொடுத்து கலக்கினார்.
பழம்பெரும் நடிகை ஹேமமாலினி பாஜகவில் இருக்கிறார். அவர் மதுரா தொகுதியின் எம்பி யாக இருக்கிறார். மீண்டும் அதே மதுரா தொகுதியில் அவர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகை ஹேமமாலினி அங்குள்ள வயல் வயல்வெளி ஒன்றுக்கு சென்று அங்கு கதிர் அறுப்பில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் பேசினார். அவர்களிடம் வாக்கு கேட்டார். அதன் பின்னர் அவர்களுடன் இறங்கி அவரும் கதிர் அறுத்து அதை தூக்கி மேலே காட்டியபடி போஸ் கொடுத்தும் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கியும் கட்டி அனைத்தும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் கடந்த பத்து வருடங்களாக இவர்களை நான் சந்தித்து வருகிறேன். தொடர்ந்து இவர்களுடன் நான் பேசி வருகிறேன். இவர்களுக்கு நான் புதிதல்ல, அதேபோல் எனக்கும் இவர்கள் புதிது அல்ல. இவர்களுடன் பேசி மகிழ்வது எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். இப்போதும் கூட தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்த பகுதிக்கு வந்த போது இவர்களை சந்தித்து பேசினேன். அப்போது எங்களுடன் இறங்கி கதிர் அறுங்கள் என்று அவர்கள் அன்போடு கேட்டுக்கொண்டனர். அதேபோல் அவர்கள் அறுத்து வைத்திருந்த கதிரை எடுத்து கையில் வைத்துக்கொண்டு போஸ் தருமாறும் அன்போடும் கட்டளையிட்டனர். எனவே அவர்களின் விருப்பப்படி நான் செய்து மகிழ்ந்தேன் என்று கூறியுள்ளார்.
நடிகை ஹேமமாலினி மீண்டும் மதுரா தொகுதியில் எம் பியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜகவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். முக்கிய தலைவர்கள் வரிசையில் ஹேமமாலினி ஒருவர் என்பதால் அவரது வெற்றி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}