மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினி வயலில் இறங்கி கதிர் அறுத்து போஸ் கொடுத்து கலக்கினார்.
பழம்பெரும் நடிகை ஹேமமாலினி பாஜகவில் இருக்கிறார். அவர் மதுரா தொகுதியின் எம்பி யாக இருக்கிறார். மீண்டும் அதே மதுரா தொகுதியில் அவர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகை ஹேமமாலினி அங்குள்ள வயல் வயல்வெளி ஒன்றுக்கு சென்று அங்கு கதிர் அறுப்பில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் பேசினார். அவர்களிடம் வாக்கு கேட்டார். அதன் பின்னர் அவர்களுடன் இறங்கி அவரும் கதிர் அறுத்து அதை தூக்கி மேலே காட்டியபடி போஸ் கொடுத்தும் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கியும் கட்டி அனைத்தும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் கடந்த பத்து வருடங்களாக இவர்களை நான் சந்தித்து வருகிறேன். தொடர்ந்து இவர்களுடன் நான் பேசி வருகிறேன். இவர்களுக்கு நான் புதிதல்ல, அதேபோல் எனக்கும் இவர்கள் புதிது அல்ல. இவர்களுடன் பேசி மகிழ்வது எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். இப்போதும் கூட தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்த பகுதிக்கு வந்த போது இவர்களை சந்தித்து பேசினேன். அப்போது எங்களுடன் இறங்கி கதிர் அறுங்கள் என்று அவர்கள் அன்போடு கேட்டுக்கொண்டனர். அதேபோல் அவர்கள் அறுத்து வைத்திருந்த கதிரை எடுத்து கையில் வைத்துக்கொண்டு போஸ் தருமாறும் அன்போடும் கட்டளையிட்டனர். எனவே அவர்களின் விருப்பப்படி நான் செய்து மகிழ்ந்தேன் என்று கூறியுள்ளார்.
நடிகை ஹேமமாலினி மீண்டும் மதுரா தொகுதியில் எம் பியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜகவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். முக்கிய தலைவர்கள் வரிசையில் ஹேமமாலினி ஒருவர் என்பதால் அவரது வெற்றி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}