மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினி வயலில் இறங்கி கதிர் அறுத்து போஸ் கொடுத்து கலக்கினார்.
பழம்பெரும் நடிகை ஹேமமாலினி பாஜகவில் இருக்கிறார். அவர் மதுரா தொகுதியின் எம்பி யாக இருக்கிறார். மீண்டும் அதே மதுரா தொகுதியில் அவர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகை ஹேமமாலினி அங்குள்ள வயல் வயல்வெளி ஒன்றுக்கு சென்று அங்கு கதிர் அறுப்பில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் பேசினார். அவர்களிடம் வாக்கு கேட்டார். அதன் பின்னர் அவர்களுடன் இறங்கி அவரும் கதிர் அறுத்து அதை தூக்கி மேலே காட்டியபடி போஸ் கொடுத்தும் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கியும் கட்டி அனைத்தும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் கடந்த பத்து வருடங்களாக இவர்களை நான் சந்தித்து வருகிறேன். தொடர்ந்து இவர்களுடன் நான் பேசி வருகிறேன். இவர்களுக்கு நான் புதிதல்ல, அதேபோல் எனக்கும் இவர்கள் புதிது அல்ல. இவர்களுடன் பேசி மகிழ்வது எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். இப்போதும் கூட தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்த பகுதிக்கு வந்த போது இவர்களை சந்தித்து பேசினேன். அப்போது எங்களுடன் இறங்கி கதிர் அறுங்கள் என்று அவர்கள் அன்போடு கேட்டுக்கொண்டனர். அதேபோல் அவர்கள் அறுத்து வைத்திருந்த கதிரை எடுத்து கையில் வைத்துக்கொண்டு போஸ் தருமாறும் அன்போடும் கட்டளையிட்டனர். எனவே அவர்களின் விருப்பப்படி நான் செய்து மகிழ்ந்தேன் என்று கூறியுள்ளார்.
நடிகை ஹேமமாலினி மீண்டும் மதுரா தொகுதியில் எம் பியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜகவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். முக்கிய தலைவர்கள் வரிசையில் ஹேமமாலினி ஒருவர் என்பதால் அவரது வெற்றி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}