சென்னை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்த நிலையில், கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை இன்று தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்றம் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது .
இதையடுத்து இரண்டு நாட்களுக்குள் தனிப்படை அமைத்து விரைவில் கஸ்தூரி கைது செய்யப்படுவார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, ராஜாக்களுக்கு சேவகம் செய்வதற்காக தெலுங்கு பேசும் பெண்கள் கொண்டுவரப்பட்டார்கள் என்று தெலுங்கு பேசும் மக்களை தாக்கி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் தெலுங்கு பேசும் அமைப்பினர் கஸ்தூரியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதன் விளைவாக மதுரை, திருச்சி, சென்னை, என பல்வேறு முக்கிய நகரங்களில் புகார்களும் எழுந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில் கஸ்தூரி வீட்டிற்கு சென்ற போலீசார் கஸ்தூரியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் அவர் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வீடை பூட்டிவிட்டு தலைமறைவானார். இதனால் நடிகை கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையே தலைமறைவான கஸ்தூரி கடந்த நவம்பர் 11ஆம் தேதி மதுரை திருநகரில் பதியப்பட்ட வழக்கில் முன்ஜாமின் கேட்டு மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். கஸ்தூரியை கைது செய்து விசாரிக்க வேண்டியிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி அளித்தார். அப்போது, கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக அவர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் தனிப்படை அமைத்து கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறை முடுக்கி விடவுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே போலீசாரின் சம்மனை பெற மறுத்து நடிகை கஸ்தூரி தலைமறைமாக உள்ள நிலையில் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}