லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக்கை சந்தித்துப் பேசியுள்ளார் நடிகை மனீஷா கொய்ராலா. தனது தாய் நாடான நேபாளத்துக்கு வருகை தருமாறும் அங்கு டிரக்கிங் (மலை ஏற்றம்) செய்யலாம் என்றும் அவர் அப்போது நேபாள பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
நடிகை மனீஷா கொய்ராலாவின் பூர்வீகம் நேபாளம் ஆகும். இந்தியாவில், இந்திப் படங்களில் நடித்துப் பிரபலமான மனீஷா கொய்ரா சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான ஹீராமண்டி தொடரில் சிறப்பாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளார். இந்த தொடருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் லண்டன் சென்ற மனீஷா, அங்கு பிரதமர் ரிஷி சுனாக்கை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ரிஷி சுனாக்கை சந்தித்த மனீஷா கொய்ராலா இதுகுறித்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார். இதுகுறித்து மனீஷா கூறுகையில், இங்கிலாந்து பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியைத் தருகிறது. இங்கிலாந்து - நேபாளம் இடையிலான 100 ஆண்டு கால நட்பைப் பாராட்டி நடந்த நிகழ்ச்சி இது. இதில் எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது பிரதமர் ரிஷி சுனாக் மிகவும் சகஜமாக பேசினார். நேபாளம் குறித்து பெருமிதம் வெளியிட்டார்.
அவரை நேபாளத்துக்கு குடும்பத்தோடு வருமாறும், எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் மேற்கொள்ளலாம் என்றும் உரிமையோடு அழைத்தேன். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் ஹீராமண்டி தொடரைப் பார்த்து ரசித்ததாகவும், எனது நடிப்பு நன்றாக இருந்தது என்றும் பாராட்டியது மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றார் மனீஷா கொய்ராலா.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}