சென்னை: பேண்டஸி ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிகை நித்யா மேனன் கமிட்டாகி உள்ளாராம்.
நடிகை நித்யா மேனன் சிறந்த நடிகை மட்டுமல்லாமல் சிறந்த பின்னணி பாடகியும் கூட. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்துள்ள அனைத்து படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது.

குறிப்பாக இவர் நடித்த வெப்பம், ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, திருச்சிற்றம்பலம், உள்ளிட்ட படங்கள் மூலம் ட்ரெண்டானவர். இப்படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகை நித்யா மேனன். இப்படம் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி கதை களத்தில் அமைந்துள்ளதாம்.
ஃபர்ஸ்ட் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பார்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் காமினி எழுதி இயக்குகிறார். இப்படத்தில் நித்யா மேனன் நாயகியாகவும், வினய் ராவ் மற்றும் நவ்தீப் கதாநாயர்களாகவும் நடிக்கிறார்கள். நடிகர் நவ்தீப் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது தமிழில் புதுப்படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

இவர் 2005 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் மூலம் அறிமுகமானவர். இவர் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய ஹிட் பெற்றது. அதுவும் இப்படத்தில் அமைந்துள்ள தீப்பிடிக்க தீப்பிடிக்க பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது.
இவர்களுடன் பிரதீக் பாப்பர், தீபக் பரம்போல் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர். இதில் தீபக் பரம்போல் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்த மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பற்றிய அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}