சென்னை: பேண்டஸி ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிகை நித்யா மேனன் கமிட்டாகி உள்ளாராம்.
நடிகை நித்யா மேனன் சிறந்த நடிகை மட்டுமல்லாமல் சிறந்த பின்னணி பாடகியும் கூட. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்துள்ள அனைத்து படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது.

குறிப்பாக இவர் நடித்த வெப்பம், ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, திருச்சிற்றம்பலம், உள்ளிட்ட படங்கள் மூலம் ட்ரெண்டானவர். இப்படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகை நித்யா மேனன். இப்படம் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி கதை களத்தில் அமைந்துள்ளதாம்.
ஃபர்ஸ்ட் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பார்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் காமினி எழுதி இயக்குகிறார். இப்படத்தில் நித்யா மேனன் நாயகியாகவும், வினய் ராவ் மற்றும் நவ்தீப் கதாநாயர்களாகவும் நடிக்கிறார்கள். நடிகர் நவ்தீப் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது தமிழில் புதுப்படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

இவர் 2005 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் மூலம் அறிமுகமானவர். இவர் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய ஹிட் பெற்றது. அதுவும் இப்படத்தில் அமைந்துள்ள தீப்பிடிக்க தீப்பிடிக்க பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது.
இவர்களுடன் பிரதீக் பாப்பர், தீபக் பரம்போல் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர். இதில் தீபக் பரம்போல் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்த மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பற்றிய அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}