கோவை : நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோர், கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திங்கள்கிழமை அன்று தனிப்பட்ட முறையில் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, சமீப காலமாக பாலிவுட்டிலும் பிரபலமாக இருந்து வருகிறார். இவர் நடிகர் ராக சைதன்யாவை 2015ம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். 2017ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 2021ம் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார் சமந்தா. அதற்கு பிறகு 2022ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு பிறகு சினிமா, யோகா என படுபிஸியாக இருந்து வந்தார் சமந்தா. கிளாமர் ரோல்களிலும் அதிகம் நடித்து வந்தார்.

இந்நிலையில் நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோரை இன்று காலை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. சுமார் 20 முதல் 30 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருமண நிகழ்வு, ஈஷா யோகா மையத்தின் லிங்க பைரவி கோவிலில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்தின் போது சமந்தா சிவப்பு நிற புடவை அணிந்திருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது பற்றி சமந்தா மற்றும் ராஜ் நிடிமோர் தரப்பிலோ, ஈஷா மையம் தரப்பிலோ இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
'தி ஃபேமிலி மேன்' தொடரின் படப்பிடிப்பின் போது சந்தித்த சமந்தா மற்றும் ராஜ் நிடிமோர், அதற்கு பிறகு நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்பட்டது. இவர்களின் திருமணம் குறித்த வதந்திகள் நீண்ட காலமாகவே பரவி வந்தன. இருவரும் மும்பையில் பலமுறை ஒன்றாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டோக்கள் வெளி வந்தன. இந்த நிலையில், ராஜ் நிடிமோரின் முன்னாள் மனைவி ஷ்யாமலி, நேற்று இரவு தனது சமூக வலைத்தளத்தில், "தவித்தவர்கள் தவித்ததை தேர்வு செய்வார்கள்" என்று ஒரு மறைமுகமான பதிவை வெளியிட்டார். இது திருமண வதந்திகளுக்கு மேலும் வலுசேர்த்தது. ராஜ் மற்றும் ஷ்யாமலி தங்களது விவாகரத்தை 2022 ஆம் ஆண்டு அறிவித்தனர்.
சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
{{comments.comment}}