"கீழ்த்தரம்".. சேலம் ஏ.வி. ராஜு மீது திரிஷா ஆவேசம்.. சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவிப்பு!

Feb 20, 2024,07:28 PM IST

சென்னை:  கீழ்த்தரமானவர்களின் செயல்கள் தொடர்வதைக் கண்டு மிகவும் அறுவெறுப்பாக இருக்கிறது. தரம் கெட்ட முறையில் பேசியவர்கள் மீது எனது சட்டக் குழு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று சேலம் ஏவி ராஜுவுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சசிகலா சிறைக்குப் போவதற்கு முன்பு அதிமுக உடைந்தது. ஓ.பன்னீர் செல்வம் தனியாக வெளியேறினார். மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா சமாதி முன்பு மெளன விரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த சமயத்தில் எம்எல்ஏக்களைத் தக்க வைப்பதற்காக கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் கொண்டு போய் தனது ஆதரவு எம்எல்ஏக்களைத் தங்க வைத்திருந்தார் சசிகலா.


அந்த கூவத்தூரில்தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்து விட்டு தான் சிறைக்குப் போனார் சசிகலா. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், சேலம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி. ராஜுவுக்கும் இடையே மோதல் ஏற்படவே அவரை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.




இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.வி. ராஜு, கூவத்தூரில் என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்து செய்தியாளர்களிடம் பரபரப்பாக பேசினார். அப்போது நடிகை திரிஷா குறித்து அவர் தெரிவித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தின. அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் சேலம் ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக திரிஷா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில்,  கீழ்த்தரமானவர்களின் செயல்கள் தொடர்வதைப் பார்க்கவே அறுவெறுப்பாக உள்ளது. தங்களது சுய நலனுக்காக எவவளவு கேடு கெட்ட நிலைக்கும் இறங்கத் தயாராக இருப்பவர்கள் இவர்கள். தேவையான கடும் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். அதற்குத் தேவையானதை எனது வழக்கறிஞர்கள் குழு உடனடியாக தொடங்கும் என்று தெரிவித்துள்ளார் திரிஷா.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்