சென்னை: அதிமுக - பாஜக தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் நல்ல சேதி வரும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அதிமுக - பாஜக மோதல் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசினார் டாக்டர் கிருஷ்ணசாமி. அப்போது அவர் கூறியதாவது:
ஒரு கூட்டு குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை வரும்போது அந்த குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அது போல பாஜக -அதிமுக இடையே முறிவு ஏற்பட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
கூட்டணியாக இருக்கும் பட்சத்தில் 40க்கு 40 என்ற விகிதத்தில் வெற்றி பெறும் இந்த சூழ்நிலையில் பிரிய வேண்டுமா... கூட்டணியை தீர்மானிக்கும் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் பாஜக தலைவர்கள், அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தை சமூகமாக நடந்து வருகிறது .விரைவில் நல்ல முடிவு வரும் என டெல்லி தலைவர்கள் கூறுகின்றனர்.
புதிய தமிழகம் கட்சியைப் பொறுத்தவரை பாஜக -அதிமுக கூட்டணி வலுவாக இருக்க வேண்டும். கூட்டணியை பொறுத்தவரை இவர்கள் பெரிது, இவர்கள் சிறிது என பிரித்துப் பார்க்கக் கூடாது. எல்லாருடைய பங்களிப்பும் முக்கியம் . கூட்டணிக்கு என்று தர்மம் உண்டு. கூட்டணியில் இருக்கும் போது கசப்பான , முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என அனைத்து கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}