சென்னை: அதிமுக - பாஜக தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் நல்ல சேதி வரும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அதிமுக - பாஜக மோதல் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசினார் டாக்டர் கிருஷ்ணசாமி. அப்போது அவர் கூறியதாவது:
ஒரு கூட்டு குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை வரும்போது அந்த குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அது போல பாஜக -அதிமுக இடையே முறிவு ஏற்பட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
கூட்டணியாக இருக்கும் பட்சத்தில் 40க்கு 40 என்ற விகிதத்தில் வெற்றி பெறும் இந்த சூழ்நிலையில் பிரிய வேண்டுமா... கூட்டணியை தீர்மானிக்கும் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் பாஜக தலைவர்கள், அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தை சமூகமாக நடந்து வருகிறது .விரைவில் நல்ல முடிவு வரும் என டெல்லி தலைவர்கள் கூறுகின்றனர்.
புதிய தமிழகம் கட்சியைப் பொறுத்தவரை பாஜக -அதிமுக கூட்டணி வலுவாக இருக்க வேண்டும். கூட்டணியை பொறுத்தவரை இவர்கள் பெரிது, இவர்கள் சிறிது என பிரித்துப் பார்க்கக் கூடாது. எல்லாருடைய பங்களிப்பும் முக்கியம் . கூட்டணிக்கு என்று தர்மம் உண்டு. கூட்டணியில் இருக்கும் போது கசப்பான , முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என அனைத்து கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}