ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் : அதிமுக அதிரடி அறிவிப்பு

Jan 11, 2025,05:22 PM IST

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறப்பணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானதை அடுத்து, அந்த தொகுதி காலியாக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 05ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்து, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த தேர்தலில் எந்தெந்த கட்சிகள் போட்டியிட போகின்றன, எந்த கட்சி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தமிழக அரசியல் களமே பரபரத்தது. 



விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் தான் தங்கள் கட்சி போட்டியிட உள்ளதாக விஜய் கட்சியின் தலைமை அறிவித்து விட்டது. இதனால் பிரதான கட்சிகளான திமுக- அதிமுக கட்சிகள் சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார்கள்? திமுக கூட்டணி சார்பில் யாருக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட உள்ளது? என்பது போன்ற கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் திமுக கூட்டணி சார்பில் இந்த முறை காங்கிரஸ் அல்லாமல் திமுக., கட்சியே களம் காணும் என்றும், வேட்பாளராக சந்திரசேகரன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(ஜனவரி 11) சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடைபெறாது. ஆட்சி அதிகாரத்தை திமுக தவறாக பயன்படுத்தும் என்பதால் அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற வாய்ப்பில்லை என்ற காரணத்தால் இடைத் தேர்தலை புறகணிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில் தற்போது கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் புறக்கணித்துள்ளது. முக்கிய கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் பின் வாங்கி வருவதால் அந்த தொகுதியில் திமுக.,வின் வெற்றி எளிதாகி உள்ளது. பாஜக, பாமக, தேமுக போன்ற கட்சிகள் என்ன முடிவை அறிவிக்க போகின்றன என்ற ஆர்வமும் தமிழக அரசியலில் அதிகரித்து வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 5.. வானிலை மையம் தகவல்

news

பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் பேராபத்து.. உதயநிதி ஸ்டாலின் கருத்து

news

நடிகர் விஜய் இந்தியா கூட்டணியில் வந்து சேரலாம்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யோசனை!

news

வெகுவிரைவில் மக்கள் திமுக ஆட்சியை புறக்கணிப்பார்கள்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

news

இந்த வருடம் நாங்கள் ஏன் சர் ஜான் மார்ஷல் பொங்கல் என்று கொண்டாடினோம்?

news

Taste Atlas most hated foods 2025.. லிஸ்ட்டுல உப்புமா இல்லை.. பஞ்சாபி மிஸ்ஸி ரொட்டிக்கு 56வது இடம்!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. துணை கேப்டனானார் சுப்மன் கில்!

news

Budget 2025.. ஜன. 31 முதல் பிப். 13 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்.. பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்!

news

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்