வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே.. தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிச்சாமி

Jun 04, 2024,07:12 PM IST

சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே என்று அவர் தெரிவித்துள்ளார்.


மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்திலும் அதிமுகவால் வெல்ல முடியாமல் போய் விட்டது. அதிமுக கூட்டணிக் கட்சிகளும் எந்த இடத்திலும் வெல்ல முடியாமல் தோல்வியுற்றுள்ளன. இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:




'கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது'


நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே!


வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம்  அதிமுக  என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.


நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கின்றன.


தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, அஇஅதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.


இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.


“எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! சத்தியமே லட்சியமாய் கொள்ளடா" என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும் என்று அவர் கூறியுள்ளார்.


கூட்டணியை வலுவாக்குமா அதிமுக?


இந்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டிருக்கும் ஒரு வாசகம் கவனம் ஈர்த்துள்ளது. அதாவது 2026 சட்டசபைத் தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்ற பாடத்தை இந்த தேர்தல் கற்றுக் கொடுத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சட்டசபைத் தேர்தலில் கூட்டணியை வலுவாக்க அதிமுக முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்பட்டால் பாஜகவுடன் கை கோர்க்கும் முடிவையும் கூட அதிமுக எடுக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.


காரணம், லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 15 தொகுதிகள் வரை அதிமுக - பாஜக வேட்பாளர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. எனவே இதை கருத்தில் கொண்டு அடுத்து வரும் தேர்தலை சந்திக்க அதிமுக திட்டமிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

அதிகம் பார்க்கும் செய்திகள்