சென்னை: தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.6700க்கும், சவரன் ரூ.53,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே உள்ளது.
கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உச்சம் தொட்ட தங்கம், அதன் பின்னர் ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. இந்த விலை ஏற்ற இறக்கத்தால் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஜூன் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலையில் பெரிய மாற்றம் எதுவும் இன்றி இருந்து வருகிறது.
ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல தான் தங்கம் மற்றும் வெள்ளி. ஏன் என்றால் தங்கம் விலை உயர்ந்தால், வெள்ளி விலையும் உயரும். தங்கம் விலை குறைந்தால் வெள்ளி விலையும் குறையும். இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது.இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களை சற்று கலக்கம் அடைய செய்துள்ளது. சரிங்க இன்றைக்கு என்ன விலை என்று பார்ப்போமா?
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,700 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.80 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,600 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,170 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,360 ஆக உள்ளது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை...
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ரூ. 1.50 காசுகள் உயர்ந்து ரூ.97.10 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 776.80 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.95.600 விற்கப்பட்டது இன்று ரூ.97.100 விற்கப்படுகிறது. ஒரு கிலோவிற்கு இன்று மட்டும் ரூ.1,500 உயர்ந்துள்ளது.
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
{{comments.comment}}