சந்திரயான் 3... வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியாச்சு.. அடுத்து என்ன?

Aug 24, 2023,09:42 AM IST
டெல்லி : நிலவில் சந்திரயான் 3 ஐ வெற்றிகரமாக தரையிறக்கியதை அடுத்து இந்தியா, விண்வெளி ஆய்வில் புதிய வரலாறு படைத்துள்ளது. அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சந்திரயான் 3, நிலவில் தரையிறங்கி விட்டது. இப்போது அடுத்து என்ன நடக்கும் என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக ஜூலை 13 ம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக நேற்று மாலை நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கியதுடன், அங்கிருந்து நிலவின் முதல் போட்டோவையும் அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவிற்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சந்திரயான் 3 ல் இருந்து பிரிந்து, நிலவில் தரையிறங்கியது வரை அனைவரின் கவனமும் விக்ரம் லேண்டர் மீது மட்டும் இருந்தது. தற்போது அனைவரின் கவனமும் பிரக்யான் ரோவர் மீது திரும்பி உள்ளது. இரவு 10 மணிக்கு மேல் ரோவரும் வெற்றிகரமாக லேண்டரை விட்டு பிரிந்து வெளியே வந்து விட்டது. இனி அது நிலவின் நிலப்பரப்பின் மீது தனது ஆய்வுப்பணிகளை துவங்கும்.  விக்ரம் லேண்டர் மற்றம் ரோவர் ஆகியவை இணைந்து நிலவின் போட்டோக்களை பூமிக்கு அனுப்ப துவங்கும். 

நிலவின் கணக்குப்படி இவை ஒரு நிலவு நாள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளன. பூமியின் கணக்குப் படி இது 2 வாரமாகும். வாய்ப்பு கிடைத்தால் மேலும் 2 வாரங்களுக்கு பிரக்யான் ரோவர் ஆய்வு நடத்தக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன. நிலவின் நிலப்பரப்பில் ஒரு விநாடிக்கு ஒரு சென்டிமீட்டர் என்ற வீதத்தில் ரோவர் பயணம் செய்யும். ஒரு குறிப்பிட்ட அளவிலான நிலப்பரப்பை ஆய்வு செய்த பிறகு அது தொடர்பான போட்டோக்கள், அந்த நிலப்பரப்பு குறித்த விபரங்களை பூமிக்கு அனுப்பும்.

ரோவர், நிலவின் மண் பரப்பு, அதில் உள்ள அணுக்கள், அதிலுள்ள கூட்டு பொருட்கள் ஆகியவற்றின் புள்ளி விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை லேண்டருக்கு அனுப்பும். லேண்டர் அது பற்றி மேலும் ஆய்வு செய்து, அது குறித்த ஆய்வு முடிவுகளை பூமிக்கு அனுப்பும்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்