அயோத்தி ராமர் கோவில் திறந்ததும் .. கையோடு கையாக பிரதமர் மோடி வெளியிட்ட முதல் அறிவிப்பு!

Jan 23, 2024,09:05 AM IST

டில்லி : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடித்த கையிலோடு டில்லி திரும்பியதும் பிரதமர் மோடி வெளியிட்ட புதிய அறிவிப்பு அனைவரையும் அசர வைத்துள்ளது. பிரதமர் அடுத்தடுத்த அதிரடிகளுக்கு தயாராகி விட்டார் போல என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த உடன் டில்லி திரும்பிய சில மணி நேரங்களிலேயே, பிரதான்மந்திரி சூர்யோதயா யோஜனா என்ற புதிய திட்டத்தை தான் அறிவித்துள்ளார் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. அதாவது இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளின் கூரையில் சோலார் தகடுகள் பதிப்பதே மத்திய அரசின் திட்டமாம். சூரிய ஒளி மூலம் மின்சார தயாரிப்பதை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாம். 




இது தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அயோத்தியில் இருந்து திரும்பியதும் நான் எடுத்துள்ள முதல் முடிவு, எங்களின் அரசு பிரதான்மந்திரி சூர்யோதயா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. உலகில் உள்ள அனைத்து பக்தர்களும் சூரிய வம்சத்தில் தோன்றி ஸ்ரீராமரால் ஒளி ஆற்றலை எப்போதும் பெறுகிறார்கள். இன்று ஒரு புனிதமான நிகழ்வு அயோத்தியில் நடந்துள்ளது. இந்திய மக்கள் அனைவரும் தங்களின் வீட்டின் மாடியிலேயே சூரிய ஒளியின் மூலம் தங்களுக்கு தேவையான ஆற்றலை பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.


ஒரு கோடி வீடுகளில் சேலார் தகடுகள் அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்சார கட்டணத்தை குறைப்பது மட்டுமல்ல, மின்சார உற்பத்தியிலும் இந்தியா தன்னிறைவு நாடாக மாற வழி செய்யும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பிரதமர் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது அனைவருக்கும் மின்சாரம் என்ற திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்துள்ளார். 


தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதை மனதில் பிரதமர் இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாக அரசியல் கட்சிகள் சில விமர்சித்தாலும், பலரிடமும் இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தால் கோடை காலங்களில் மின்சார தட்டுப்பாடு, பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் ஏற்படாது என பலரும் தெரிவித்துள்ளனர்.


விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில்,  அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா முடிந்து விட்டதால், இனி அடுத்தடுத்த அதிரடி திட்டங்களை பிரதமர் அறிவிப்பார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்