டெல்லி: எம்.பி பதவியை மீண்டும் பெற்றுள்ள ராகுல் காந்தி தற்போது தான் வசித்து வந்த அதே வீட்டைத் திரும்பப் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி உறுப்பினராக இருப்பவர் ராகுல் காந்தி. கடந்த 2017ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோடி என்ற பெயரை கூறி தெரிவித்த கருத்துக்காக அவருக்கு குஜராத் மாநிலம் சூரத் கோர்ட், 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. வயநாடு தொகுதி காலியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் இந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதித்தது. மேலும் ராகுல்காந்தியின் சிறைத் தண்டனையையும் கோர்ட் நிறுத்தி வைத்தது. இதனால் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி பதவியை வகிக்கும் தகுதியைப் பெற்றார். லோக்சபா செயலகமும் ராகுல் காந்திக்கு மீண்டும் எம் பி பதவியை வழங்கியது.
முன்பு எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் வசித்து வந்த வீட்டைக் காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. ராகுல் காந்தியும் உடனடியாக தனது வீட்டைக் காலி செய்து கொடுத்து விட்டார். தற்போது ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி கிடைத்துள்ளதைத் தொடர்ந்து அவர் ஏற்கனவே வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன் பங்களாவை மீண்டும் அவருக்கே ஒதுக்கியுள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}