டெல்லி: எம்.பி பதவியை மீண்டும் பெற்றுள்ள ராகுல் காந்தி தற்போது தான் வசித்து வந்த அதே வீட்டைத் திரும்பப் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி உறுப்பினராக இருப்பவர் ராகுல் காந்தி. கடந்த 2017ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோடி என்ற பெயரை கூறி தெரிவித்த கருத்துக்காக அவருக்கு குஜராத் மாநிலம் சூரத் கோர்ட், 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. வயநாடு தொகுதி காலியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் இந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதித்தது. மேலும் ராகுல்காந்தியின் சிறைத் தண்டனையையும் கோர்ட் நிறுத்தி வைத்தது. இதனால் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி பதவியை வகிக்கும் தகுதியைப் பெற்றார். லோக்சபா செயலகமும் ராகுல் காந்திக்கு மீண்டும் எம் பி பதவியை வழங்கியது.
முன்பு எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் வசித்து வந்த வீட்டைக் காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. ராகுல் காந்தியும் உடனடியாக தனது வீட்டைக் காலி செய்து கொடுத்து விட்டார். தற்போது ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி கிடைத்துள்ளதைத் தொடர்ந்து அவர் ஏற்கனவே வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன் பங்களாவை மீண்டும் அவருக்கே ஒதுக்கியுள்ளனர்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}