எம்.பி  பதவியைத் தொடர்ந்து.. ராகுல் காந்திக்கு மீண்டும் அதே வீடு கிடைத்தது!

Aug 08, 2023,03:53 PM IST

டெல்லி: எம்.பி பதவியை மீண்டும் பெற்றுள்ள ராகுல் காந்தி தற்போது தான் வசித்து வந்த அதே வீட்டைத் திரும்பப் பெற்றுள்ளார்.


கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி உறுப்பினராக இருப்பவர் ராகுல் காந்தி. கடந்த 2017ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோடி என்ற பெயரை கூறி தெரிவித்த கருத்துக்காக அவருக்கு குஜராத் மாநிலம் சூரத் கோர்ட், 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. வயநாடு தொகுதி காலியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் இந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதித்தது. மேலும்  ராகுல்காந்தியின் சிறைத் தண்டனையையும் கோர்ட் நிறுத்தி வைத்தது. இதனால் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி பதவியை வகிக்கும் தகுதியைப் பெற்றார்.  லோக்சபா செயலகமும் ராகுல் காந்திக்கு மீண்டும் எம் பி பதவியை வழங்கியது.


முன்பு எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் வசித்து வந்த வீட்டைக் காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. ராகுல் காந்தியும் உடனடியாக தனது வீட்டைக் காலி செய்து கொடுத்து விட்டார். தற்போது ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி கிடைத்துள்ளதைத் தொடர்ந்து அவர் ஏற்கனவே வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன்  பங்களாவை மீண்டும் அவருக்கே ஒதுக்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்