மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 49 பேர் பலியாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் அகமதாபாத் நகரில் ஏற்பட்ட விமான விபத்து உலகையே கதிகலங்கச் செய்தது. இந்த விமான விபத்தில் ஒரு பயணியை தவிர்த்து மற்ற 242 பயணிகளும் உயிரிழந்தனர். அதுமட்டும் இன்றி விமானம் விழுந்த மருத்துவக்கல்லூரி கட்டட விடுதியில் இருந்த மாணவர்களும் பலியாகினர். இந்த சம்பவத்தில் இருந்து மக்கள் வெளியே வருவதற்குள் தற்போது மீண்டும் ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இருந்து டின்டா பகுதிக்கு அங்கார ஏர்லைன்ஸ் நிறுவனத்திவ் ஏஎன் 24 ரக பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் டின்டா அருகில் சென்ற போது, திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு தூண்டித்ததாகவும், அதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தொடங்கியது. அந்த விமானம் மாயமானதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், சில நிமிடங்களிலேயே சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஆமுர் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகின.
விமானம் நொறுங்கிய சில பாகங்கள் அந்த பகுதியில் கண்டறியப்பட்டன. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள், 6 விமான ஊழியர்கள் பயணித்த நிலையில், தற்போது விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் கரும்புகையுடன் காட்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. மேலும், விபத்து பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மீட்பு குழுவினரை தற்போது ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.
 
                                                                            கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
 
                                                                            இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}