டெல்லி: 2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலை முன்னிட்டு 23 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது பாஜக. இதில் தமிழ்நாட்டு தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன் மற்றும் இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் தேதி இன்னும் வெளியாகவில்லை. இதை பல்வேறு கட்சிகளும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு கட்சிகளும் தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பல்வேறு குழுக்களை அமைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, தேர்தல் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு 23 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அரசு நியமித்து அதிகரிப்பூர்வமான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டுத் தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன் மற்றும் இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி ஆகியோரை பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}