டெல்லி: 2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலை முன்னிட்டு 23 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது பாஜக. இதில் தமிழ்நாட்டு தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன் மற்றும் இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் தேதி இன்னும் வெளியாகவில்லை. இதை பல்வேறு கட்சிகளும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு கட்சிகளும் தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பல்வேறு குழுக்களை அமைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, தேர்தல் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு 23 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அரசு நியமித்து அதிகரிப்பூர்வமான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டுத் தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன் மற்றும் இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி ஆகியோரை பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}