ஈரோடு கிழக்கில் வெல்வோம்.. "செங்கோட்டை"யை ஆச்சரியப்படுத்துவோம்.. செங்கோட்டையன்

Jan 29, 2023,02:55 PM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கில் மாபெரும் வெற்றி பெற்று, டெல்லி "செங்கோட்டை"க்கு ஆச்சரியத்தைக் கொடுப்போம் என்று முன்னாள் அமைச்சரும் ,அதிமுக மூத்த தலைவருமான  கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 27ம் தேதி அங்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ்  சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது.



தேமுதிக ஏற்கனவே வேட்பாளரை அறிவித்து விட்டது. நாம் தமிழர் கட்சியும் தனது சார்பில் வேட்பாளரை அறிவித்துள்ளது. அமமுக கூட போட்டியிடுகிறது, வேட்பாளரையும் கூறி விட்டது. ஆனால் மறுபக்கம் அதிமுக கூட்டணியிலிருந்து இன்னும் எந்தத் தெளிவும் கிடைக்கவில்லை. அதிமுகதான் போட்டியிடும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவால் இதுவரை வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. பாஜகவும் பலத்த அமைதி காக்கிறது. ஓ.பி.எஸ்ஸும் தனது நேரத்துக்காக காத்திருக்கிறார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கில் வென்று டெல்லி செங்கோட்டைக்கு ஆச்சரியத்தைக் கொடுப்போம் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஈரோடு கிழக்கில் எங்களுக்குக் கிடைக்கப் போகும் வெற்றி, செங்கோட்டையை அதிர வைக்கும்,ஆச்சரியப்படுத்தும். இந்தத் தேர்தல் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

தொண்டர்கள் கட்சியின் வெற்றியை மனதில் வைத்து தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். கட்சியின் நிர்வாகக் குழு விரைவில் கூடி வேட்பாளரை இறுதி செய்யும் என்றார் செங்கோட்டையன்.

இந்தத் தேர்தலில் பாமகவும், சமத்துவ மக்கள் கட்சியும் போட்டியிடவில்லை, ஒதுங்கி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்