மதுரை: அதிமுகவில் பிளவு ஏற்படப் போவதாகவும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் அதிமுக உடையும் என்று பலவாறாக பேச்சு அடிபட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதுகுறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா தலைமையில் ஒரு கட்சியும், ஓ.பி.எஸ் தலைமையில் இன்னொரு பிரிவுமாக கட்சி பிளந்தது. அதன் பின்னர் சசிகலா ஜெயிலுக்குப் போனார்.. டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியைத் தொடங்கினார்.. எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்தார் ஓபிஎஸ்.. அதிமுகவை ஓபிஎஸ்ஸும் - இபிஎஸ்ஸும் இணைந்து வழி நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வருகிற லோக்சபா தேர்தல் முடிவுக்குப் பிறகு மீண்டும் அதிமுக உடையப் போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சிலர் கூறி வரும் தகவல்கள் பரபரப்பைக் கிளப்புவதாக உள்ளது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கட்சியில் பிளவு ஏற்படப் போகுதாமே என்று கேட்டனர்.
அதைக் கேட்ட செல்லூர் ராஜு தனது கட்சிக்காரர்கள் பக்கம் திரும்பி என்னப்பா பிளவு இருக்கா.. ஏம்ப்பா பிளவு இருக்கா.. எல்லாரும் ஒற்றுமையாத்தானே இருக்கீங்க என்று கிண்டலாக கேட்டு விட்டு செய்தியாளருக்குப் பதில் அளித்தார். அவர் கூறுகையில், ஒன்னு ரெண்டு போ் போவாங்க தம்பி. இந்த மரத்துல ஆலமரத்துல, வெயில் காலத்துல சில இலைகள் உதிரும். பாத்திருக்கீங்களா.. கேள்வி கேட்ட தலைவரே.. பாத்திருக்கியா.. ஆனா திரும்ப தளிர்த்து விடும்.
இந்த இயக்கத்துல சில பேர் போவாங்க.. பல பேர் வருவாங்க. இது பீனிக்ஸ் பறவை போல. அழிவது போல தெரியும். ஆனால் வீறு கொண்டெழும். அதுதான் அதிமுக என்று பதிலளித்தார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}