குருகிராம் அலுவலகத்தில் பார்ட்டி செய்த.. ஏர் இந்தியா மூத்த அதிகாரிகள் பதவியிலிருந்து நீக்கம்

Jun 28, 2025,05:28 PM IST

குருகிராம்: ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நான்கு நாட்களில் குருகிராமில் உள்ள அலுவலகத்தில் பார்ட்டி நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளனர் நான்கு மூத்த ஏர் இந்தியா அதிகாரிகள். அவர்களை ராஜினாமா செய்ய நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாம்.


குருக்ராமில் நடந்த அலுவலக பார்ட்டி வீடியோ வைரலானதை அடுத்து, ஏர் இந்தியா SATS (AISATS) நிறுவனத்தின் நான்கு மூத்த அதிகாரிகள் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். 


ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 259 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் துக்கம் நிலவிய நிலையில், AISATS தலைமை இயக்க அதிகாரி ஆபிரகாம் சக்கரியா மற்றும் பிற ஊழியர்கள் இசைக்கு நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. 




இந்தியாவின் மோசமான விமான விபத்துகளில் ஒன்று நடந்த உடனேயே இந்த கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது மனிதாபிமானமற்றது, மிகவும் மோசமான செயல் என்று பலரும் கண்டித்தனர். விபத்துக்குப் பிறகு நடந்த பார்ட்டி பலரின் கோபத்தை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் பலரும் நிறுவனத்தின் இந்த செயலை கண்டித்தனர்.


இதற்கு பதிலளித்துள்ள AISATS நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், "AI171 விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். சமீபத்தில் வெளியான வீடியோவில் நடந்த தவறை நாங்கள் வருந்துகிறோம். இந்த நடத்தை எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இரக்கத்துடனும், தொழில்முறையுடனும், பொறுப்புடனும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளது.


பார்ட்டி எப்போது நடந்தது என்பதை AISATS நிறுவனம் குறிப்பிடவில்லை. ஆனால், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த நான்கு மூத்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. AISATS என்பது ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த SATS Ltd. ஆகிய நிறுவனங்களின் கூட்டு அமைப்பாகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்.. மு.க.ஸ்டாலின்

news

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு : அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

news

தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கு விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட் தடை

news

கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்

news

உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?

news

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?

news

உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?

news

நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்