மாஸ் லீவு எடுத்து.. ஏர் இந்தியா விமானிகள் திடீர் போராட்டம்.. பல விமானங்கள் ரத்து!

May 08, 2024,11:22 AM IST

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானிகள் ஒட்டுமொத்தமாக மாஸ் லீவ் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பல்வேறு சேவைகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. விடுப்பு எடுத்த அனைவருமே சொல்லி வைத்தாற் போல செல்போன்களையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டனர்.


சுமார் 300க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமானிகள் மொத்தமாக விடுப்பு எடுத்துள்ளனர். ஏர் இந்தியா விமானிகள் பல்வேறு கட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் ஒரு கட்டமாக மாஸ் லீவு எடுக்கும் போராட்டம் நடைபெறுகிறது. இதனால் 86 சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 




எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்  நாடு முழுவதும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏர் இந்தியாவில் பயணிக்க காத்திருந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு - டெல்லி, கோழிக்கோடு - துபாய், குவைத் - தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் உள்ளிட்ட 79 சர்வதேச மற்றும் உள்நாட்டு ஏர் இந்தியா விமானங்களும் இன்று காலை ரத்து செய்யப்பட்டுள்ளன.


ஏர் இந்தியா நிறுவனம் முன்பு மத்திய அரசிடம் இருந்தது. அதை டாடா நிறுவனத்திடம் மத்திய அரசு விற்று விட்டது. டாடாவுடன் ஏர் இந்தியா இணைந்த பிறகு விமானிகள், ஊழியர்களை சமமாக டாடா நிறுவனம் நடத்தவில்லை என்ற பிரச்சினை எழுந்தது.. இதுதொடர்பான பிரச்சினையால்தான் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.


போராட்டம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் கூறுகையில், நேற்று இரவு முதல் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிக்கலை தீர்க்க எங்கள் குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பயணிகளுக்கு ஏதேனும் அசௌவுகரியத்திற்காக, பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பயணிகள் பலர் தங்களுக்கு விமானம் ரத்து செய்யப்படுவதாக எந்த ஒரு தகவலும் இதுவரை வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்துக் குமுறல் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பயணிகளின் சிரமத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளது. பயணிகளுக்கு முழு பணத்தையும் திருப்பிக் கொடுத்தல் அல்லது அவர்கள் விரும்பும் வேறு ஒரு தேதிக்கு பயண டிக்கெட் வழங்குவது ஆகியவை செயல்படுத்தப்படும் என்று ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் தொடரும் மழை... இன்றும் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு... வானிலை மையம்!

news

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

news

Trump Tax: அமெரிக்காவை ஆட்டம் காண வைக்க நம்மால் முடியாதா.. நாம் என்ன செய்ய வேண்டும்?

news

உருவானது வெர்டிஸ் நாடு.. 20 வயது இளைஞரின் அதிரடி.. ஆனால் இது கைலாசா மாதிரி கிடையாது!

news

கொள்ளிடத்தில்..தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

news

இலங்கை படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்

news

நான் உழைத்து உருவாக்கிய கட்சியை கொடுத்து விட்டு டம்மியாக இருக்க முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

வரலட்சுமி விரதம் 2025.. லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து விரதம் இருப்போம்!

news

சாமியார் வேடத்தில் மனைவியைத் தேடி வந்த கணவர்.. அடுத்து நடந்த அதிரடி.. அடக் கொடுமையே!

அதிகம் பார்க்கும் செய்திகள்