மாஸ் லீவு எடுத்து.. ஏர் இந்தியா விமானிகள் திடீர் போராட்டம்.. பல விமானங்கள் ரத்து!

May 08, 2024,11:22 AM IST

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானிகள் ஒட்டுமொத்தமாக மாஸ் லீவ் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பல்வேறு சேவைகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. விடுப்பு எடுத்த அனைவருமே சொல்லி வைத்தாற் போல செல்போன்களையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டனர்.


சுமார் 300க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமானிகள் மொத்தமாக விடுப்பு எடுத்துள்ளனர். ஏர் இந்தியா விமானிகள் பல்வேறு கட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் ஒரு கட்டமாக மாஸ் லீவு எடுக்கும் போராட்டம் நடைபெறுகிறது. இதனால் 86 சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 




எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்  நாடு முழுவதும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏர் இந்தியாவில் பயணிக்க காத்திருந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு - டெல்லி, கோழிக்கோடு - துபாய், குவைத் - தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் உள்ளிட்ட 79 சர்வதேச மற்றும் உள்நாட்டு ஏர் இந்தியா விமானங்களும் இன்று காலை ரத்து செய்யப்பட்டுள்ளன.


ஏர் இந்தியா நிறுவனம் முன்பு மத்திய அரசிடம் இருந்தது. அதை டாடா நிறுவனத்திடம் மத்திய அரசு விற்று விட்டது. டாடாவுடன் ஏர் இந்தியா இணைந்த பிறகு விமானிகள், ஊழியர்களை சமமாக டாடா நிறுவனம் நடத்தவில்லை என்ற பிரச்சினை எழுந்தது.. இதுதொடர்பான பிரச்சினையால்தான் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.


போராட்டம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் கூறுகையில், நேற்று இரவு முதல் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிக்கலை தீர்க்க எங்கள் குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பயணிகளுக்கு ஏதேனும் அசௌவுகரியத்திற்காக, பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பயணிகள் பலர் தங்களுக்கு விமானம் ரத்து செய்யப்படுவதாக எந்த ஒரு தகவலும் இதுவரை வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்துக் குமுறல் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பயணிகளின் சிரமத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளது. பயணிகளுக்கு முழு பணத்தையும் திருப்பிக் கொடுத்தல் அல்லது அவர்கள் விரும்பும் வேறு ஒரு தேதிக்கு பயண டிக்கெட் வழங்குவது ஆகியவை செயல்படுத்தப்படும் என்று ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக.,விற்கு எத்தனை சீட்? .. சூப்பர் சுவாரஸ்ய எதிர்பார்ப்பு!

news

விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... 27ம் தேதி சேலம் இல்லைங்க.. கரூரில் மக்களை சந்திக்கிறார்

news

சென்னையில் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை மைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

news

திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!

news

விஜயம் - ஜெயம் பேச்சு.. நான் சொன்னது ஆக்சுவல்லி மொக்கையானது.. பார்த்திபன் விளக்கம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பு... ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு

news

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்?: அன்புமணி ராமதாஸ்!

news

ஜிஎஸ்டி சீரமைப்பு அமலான முதல் நாளில்.. இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்