சென்னை மெட்ரா ரயில்களில்..  பயணிகள் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. இதாங்க காரணம்!

Jan 07, 2023,12:59 PM IST
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் சமீப காலமாக பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது.  மக்களின் வெகு ஜன போக்குவரத்தில் மெட்ரோ ரயில்கள் தனி இடம் பிடித்து வேகமாக பிடித்து முன்னேறத் தொடங்கி விட்டதே இதற்குக் காரணம்.



சென்னை பொதுப் போக்குவரத்து ஒரு காலத்தில் சாலை மற்றும் புறநகர் ரயில்களாக மட்டுமே இருந்து வந்தது. சாலைப் போக்குவரத்தை விட்டால் அடுத்து புறநகர் ரயில்கள் என்ற அளவில் மட்டுமே இருந்து வந்தது. இதனால் பஸ்களிலும் கூட்டம் அலை மோதும். புறநகர் ரயில்களிலும் நிறைய கூட்டம் இருக்கும்.

மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரவே அடுத்தடுத்த போக்குவரத்து சமாளிப்புகளில் மாநில அரசும், மத்திய அரசும் இறங்கின. அதன் படி மாடி ரயில் அறிமுகமானது. இது ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவியது. ஆனால் அதுவும் இப்போது போதாது என்ற நிலை ஏற்படவே, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

மெட்ரோ ரயில் வந்ததும் சென்னை நகர போக்குவரத்தின் முகமே மாறிப் போய் விட்டது. எங்கெல்லாம் எளிதில் போக முடியாதோ அங்கெல்லாம் இப்போது மெட்ரோவில் ஏறி சுலபமாக போய் வர முடிகிறது. குறிப்பாக அண்ணா சாலைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால் பஸ் போக்குவரத்துதான் மிக முக்கியமானதாக இருந்தது. ஆனால் மெட்ரோ வந்ததற்குப் பிறகு இப்போது ரயிலில் எளிமையாக செல்ல முடிகிறது.

அதேபோல வட சென்னையின் பல உட்புறப் பகுதிகளுக்கும் மெட்ரோவில் எளிதாக பயணிக்க முடிகிறது. இந்தப் பக்கம் கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி என மெட்ரோ ரயில், மக்களின் போக்குவரத்து அலைச்சலை வெகுவாக குறைத்து விட்டது. மெட்ரோவில் சமீப காலமாக பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க இன்னொரு முக்கியக் காரணம் உள்ளது.

வெளியில் ஆட்டோ, டாக்சி கட்டணத்துடன் ஒப்பிடுகையில் மெட்ரோவில் கட்டணம் மிக மிக குறைவு. 50 ரூபாய் இருந்தால் போதும் மிக நீண்ட தூரத்தையும் கூட எளிதாக அடைந்து விட முடிகிறது. அலைச்சலும் இல்லை. வியர்க்க விறுவிறுக்க, போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டியதில்லை. குளுகுளு வசதியுடன் ஆடாமல் அசையாமல் அலுங்காமல் குலுங்காமல் போய் விட முடிகிறது. இதுதான் மக்கள் அதிக அளவில் மெட்ரோவை நாட முக்கியக் காரணம்.

குறிப்பாக விமான நிலையம் செல்வதற்கும், கோயம்பேடு பஸ் நிலையம் செல்வதற்கும் மெட்ரோதான் மிகச் சிறந்த வழி. தேவையில்லாத டென்ஷனைக் குறைத்து பயணத்தையும் என்ஜாய் செய்ய முடிகிறது.  விமான நிலையம் செல்ல விரும்புவோரில் முக்கால்வாசிப் பேர் இப்போது மெட்ரோவைத்தான் நாடுகின்றனர். விமான நிலையத்திலிருந்து வருவோரும், மெட்ரோவில் ஏறித்தான் தாங்கள் விரும்பும் பகுதிகளுக்கு பயணப்படுகின்றனர்.

விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10,000 பேர் வரை வருவதும், இறங்குவதுமாக உள்ளதாக மெட்ரோ நிறுவனம் தெரிவிக்கிறது.  இதில் கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்டோர் விமான நிலையம் வருவபவர்களாக உள்ளனர். ஒரு இடத்திலிருந்து விமான நிலையம் வர ஆட்டோ என்றால் குறைந்தது 200 ரூபாயாவது கொடுக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் 500 வரை தர வேண்டியுள்ளது. ஆனால் வெறும் 50 ரூபாயில் மெட்ரோ மூலம் விமான நிலையம் வர முடிவது மக்களுக்கு வரப் பிரசாதமாக உள்ளது.

மெட்ரோவில் பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. வேகமாக நடந்து வரும் இந்தப் பணிகள் முழுமை அடையும்போது சென்னை மக்களுக்கு மிகப் பெரிய அளவில் மெட்ரோ நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்