மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் அஜித் பவார்.. பரபரப்பை கிளப்பிய பிரித்விராஜ் சவான்

Jul 25, 2023,09:39 AM IST
மும்பை : அஜித் பவார் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் என காங்கிரஸ் தலைவரும் , மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் பேசி உள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தற்போது மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இருந்து வருகிறார். இவர் சிவசேனாவில் இருந்தவர். அந்தக் கட்சியை உடைத்துக் கொண்டு, பாஜக பக்கம் தாவி  கூட்டணி வைத்து முதல்வர் பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் பாஜகவைச் சேர்ந்தவரும் துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ்தான் முக்கிய முடிவுகளின் பின்னணியில் இருப்பதாக ஏற்கனவே வதந்தி உள்ளது.



அடுத்த தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார் என்றும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைக்கப்பட்டது. அதிலிருந்து தாவி வந்த அஜீத் பவார் துணை முதல்வராக்கப்பட்டார். அஜீத் பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் தம்பி ஆவார். என்னதான் கட்சி தாவினாலும், கட்சியை உடைத்தாலும் கூட அண்ணனும் தம்பியும் சுமூகமாகத்தான் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிருத்விராஜ் சவான், வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அஜித் பவார் மகாராஷ்டிர முதல்வராக்கப்படுவார். சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். ஆகஸ்ட் 10 ம் தேதி அஜித் பவார் முதல்வராக பதவியேற்பார். முதல்வர் ஷிண்டே தகுதிநீக்கம் செய்யப்பட்டு, ஆகஸ்ட் 10 ம் தேதி 15 சிவசேனா எம்எல்ஏ.,க்கள் கட்சியில் இருந்து விலகுவார்கள் என்றார்.

எந்த தகவலின் அடிப்படையில் தான் இப்படி சொல்கிறேன் என்பதை சொல்ல பிருத்விராஜ் மறுத்து விட்டார். இது நீண்ட நாட்களாகவே போய் கொண்டிருக்கும் பேச்சு தான். தற்போது தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டிருப்பதால் இது நடக்க போகிறது. ஷிண்டேவிற்கு எதிராக ஒரு குரூப் சபாநாயகரிடம் புகார்  அளித்துள்ளது. இதன் முடிவு ஆகஸ்ட் 10 வாக்கில் அறிவிக்கப்படும். தகுதி நீக்கத்தில் இருந்து அவர்கள் தப்பிக்கவே முடியாது என்றார்.

மகாராஷ்டிராவில் மிகப் பெரிய அரசியல் காமெடி நடந்து கொண்டுள்ளது. ஏற்கனவே நடந்த அரசியல் கொடுமையை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ள போதிலும் கூட தொடர்ந்து அதே பாணி அரசியல்தான் அங்கு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!

news

கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!

news

என்னுள் எழுந்த (தீ)!

news

144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!

news

ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்