- தி. மீரா
அக்காரவடிசல் (Akkaravadisal) என்பது வைணவக் கோயில்களில், குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு உன்னதமான இனிப்பு வகை பிரசாதமாகும். இது சர்க்கரைப் பொங்கலைப் போன்ற தோற்றம் கொண்டாலும், அதன் சுவையும் செய்யும் முறையும் முற்றிலும் மாறுபட்டது.
சர்க்கரைப் பொங்கல் பொதுவாகத் தண்ணீரில் வேகவைக்கப்படும். ஆனால், அக்காரவடிசல் என்பது முழுக்க முழுக்கப் பாலிலேயே அரிசியும் பருப்பும் வெந்து உருவாவதாகும். இதில் தண்ணீர் சேர்க்கப்படுவதில்லை என்பதே இதன் ரகசியம்.
மார்கழி மாதத்தில் இந்த அக்காரவடிசல் மேலும் சிறப்பு சேர்க்கிறது. அந்த அக்காரவடிசலை நாமே வீட்டில் சூப்பராக தயாரிக்கலாம்.. செய்து பார்ப்போமா.. வாங்க சமையல் கட்டுக்குள் போவோம்.
அக்காரவடிசல் செய்யத் தேவையானவை:

பச்சரிசி கால் கிலோ
பச்சைப் பருப்பு-100 கிராம்
வெல்லம் ஒன்றரைக் கிலோ (ஒரு பங்கு அரிசிக்கு ஆறு பங்கு வெல்லம்)
ஏலக்காய் தூள்- 2 ஸ்பூன்
இவை தவிர, நிறைய பால், நிறைய நெய், அரிசி, வெல்லம் அளவுக்கு குறைந்தது நான்கு லிட்டர் பால் சேர்க்கலாம், ஒன்றரைக் கிலோ நெய் ஊற்றலாம்.
அக்காரவடிசலுக்கு நெய்யும் பாலும் விடுவதில் தயக்கமோ கஞ்சத்தனமோ கூடவே கூடாது. கைவலித்தாலும் நிறுத்தாமல் கிண்ட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அடிப்பிடித்துவிடும்.
அக்காரவடிசலில் முந்திரி, திராட்சை போன்றவற்றை பகட்டுக்காகவோ, ருசிக்காகவோ போடக்கூடாது.
செய்முறை
அரிசியையும் பாசிப்பருப்பையும் கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்து களைந்து கழுவி, தண்ணீரை வடித்து கொஞ்சநேரம் நிழலில் காய வையுங்கள். பிறகு ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு அரிசி, பருப்பைப் போட்டு லேசாக வறுங்கள்.
அரிசி ஒரு பங்குக்கு ஐந்து பங்கு பால் சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். எவ்வளவு குழைகிறதோ அவ்வளவு ருசி கிடைக்கும். எனவே நன்கு குழையவிட்டு இறக்குங்கள்.
வெல்லத்தைத் தூளாக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டியபின் ஒரு வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி அடுப்பில் வையுங்கள். கொஞ்சம் சூடானதும், குழைய வெந்த அரிசி பருப்புக் கலவையை வெல்லக் கரைசலில் போடுங்கள். ஒரு லிட்டர் பாலைச் சேர்த்து, கிளற ஆரம்பியுங்கள். இறுக இறுக பால் சேருங்கள். கிளறுங்கள்.
பால் தீர்ந்ததும், நெய் சேர்த்துக் கிளறுங்கள். இறுகும் போதெல்லாம் வழிய வழிய நெய் விடுங்கள். அக்காரவடிசலுக்கு அலங்காரமே அதில் மினுமினுக்கும் நெய்தான். எனவே உங்களால் முடிந்த அளவுக்கு நெய்யை ஊற்றுங்கள்.
கடைசியாக சிறிது ஏலப்பொடி, பச்சைக் கற்பூரப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள். நிவேதனம் செய்து அரங்கனை வணங்கிவிட்டு சாப்பிடுங்கள். சூப்பராக இருக்கும். ஒருதடவை செய்து பாருங்களேன்.. சொக்கிப் போய்டுவீங்க, டேஸ்ட்டில்!
(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!
நீதி தவறா தமிழ் மன்னர்களை நினைவு கூற வேண்டிய நாள் இன்று!
கமகமக்கும் மதுரை சாம்பார்.. சாப்பிட்டுப் பாருங்க.. சும்மா அள்ளும்ல!
{{comments.comment}}