- உமாராணி சங்கரலிங்கம்
அட்சய திருதியை அன்று, நாம் எதை வைத்துப் பூஜை செய்கிறோமோ, அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம், வெள்ளி வாங்குவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இன்றைய காலகட்டத்தின் உடனடித் தேவை: உலக அமைதி மற்றும் தண்ணீர்.
உலக அமைதிக்காக நாம் அனைவரும் இந்த அட்சய திருதியை அன்று இறைவனிடம் பிரார்த்திப்போம். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மக்களும் மனமகிழ்வுடனும், சந்தோஷத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி வேண்டுவோம்.
அடுத்து, தண்ணீருக்காக...

கடந்த முறை நாம் இதேபோல் செய்ததன் விளைவாக, மிகச் சிறப்பாக மழை பெய்து இன்றுவரை அதன் பயனை அனுபவித்து வருகிறோம். எனவே, வரும் அட்சய திருதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு செம்பு நிறையத் தண்ணீரைப் பூஜை அறையில் இறைவன் முன்பு வைத்து, நம் எல்லோருக்கும் குறைவில்லாத தண்ணீர் கிடைக்கவும், நல்ல மழை பொழிந்து ஆறு, குளம், குட்டை, ஏரி என அனைத்தும் நீர் நிரம்பி எங்கும் பசுமை நிலவவும், விவசாயம் செழிக்கவும், அமைதி மற்றும் ஆனந்தம் பெருகவும் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இது சரியான முறை என்று நீங்கள் கருதினால், உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இதைப் பகிருங்கள். இன, மத, ஜாதி, மொழி வேறுபாடின்றி அனைவரையும் அவரவர் வழிபடும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யச் சொல்லுங்கள்.
"நீரின்றி அமையாது உலகு"
பிரபஞ்சத்திற்கு நன்றி. பஞ்சபூதங்களுக்கு நன்றி. ஏக இறைவனுக்கு நன்றி.
(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர், மன உளவியலாளர்)
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}