அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி மீது.. 2வது இடம் பெற்ற அபி சித்தர் வழக்கு.. கோர்ட் நோட்டீஸ்!

Feb 06, 2024,05:13 PM IST

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


ஜல்லிக்கட்டுன்னா அது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் என்று கூறும் அளவிற்கு  உலகப்பெயர் பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை கொடியசைத்து கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி தொடங்கி வைத்தார். போட்டியில் வணிகவரித்துறை அமைச்சர் ப.மூர்த்தி, மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.




முதல் சுற்றிலிருந்தே போட்டி விறுவிறுப்பாக நடந்து வந்தது. 1200 காளைகள் பங்கேற்ற நிலையில், நேரமின்மை காரணமாக 652 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன. ஒரு மணி நேரம் போட்டி நேரமும் அதிகரிக்கப்பட்டது. 800 மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் மொத்தம் 10 சுற்றுகள் நடைபெற்றன. 


போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் தனித்தனியே பரிசுகள் வழங்கப்பட்டன. மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் 18 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்தார். இவருக்கு அடுத்த இடத்தை பூவந்தி அபி சித்தர் 2வது இடம் பிடித்தார். இவர் 17 காளைகளை அடக்கினார். இவர் கடந்த 2023ம் ஆண்டு முதலிடம் பிடித்த சாதனையாளர் ஆவார்.


இந்த நிலையில் போட்டி முடிந்ததும், போட்டியின் போது முறைகேடு நடந்தாக அபி சித்தர் பரபரப்பு குற்றம் சாட்டினார். போட்டி நேரத்தை அதிகரித்தது தவறு. தான்தான் முதலில் இருந்து வந்ததாகவும், தான் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் அமைச்சர் மூர்த்தி தனக்கு எதிராக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினார் அபி சித்தர்.


இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்துள்ளார். இந்த மனுவை இன்று விசாரித்த ஹைகோர்ட் கிளை, ஜல்லிக்கட்டு விழா கமிட்டி பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.


ஸ்டேடியத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் முதலிடம்




அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2வது இடம் பிடித்த அபி சித்தர், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தின் தொடக்க விழாவையொட்டி நடந்த போட்டியிலும் கலந்து கொண்டார். அப்போட்டியில் அவருக்கு முதல் பரிசு கிடைத்து, மகிந்திரா தார் ஜீப் பரிசாக கிடைத்தது என்பது நினைவிருக்கலாம்.


சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்