மாஸ்கோ: ரஷ்ய சிறையில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடல் நல்லடக்கம், வெள்ளிக்கிழமை மாஸ்கோவில் நடைபெறும் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மரியினோ மாவட்டத்தில் உள்ள போரிஸோவ்ஸ்கோயே கல்லறைத் தோட்டத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். முன்னதாக அவரது உடல் அடக்கம் தொடர்பாக பெரும் குழப்பம் நிலவி வந்தது. மேலும் சில கல்லறைத் தோட்டங்கள் அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்ததால் புதிய குழப்பமும் ஏற்பட்டது. தற்போது எல்லாம் சரியாகி உடல் அடக்கம் முடிவாகியுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார் அலெக்ஸி நவல்னி. அவரது மறைவு குறித்து இதுவரை அதிபர் விலாடிமிர் புடின் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். புடின்தான் இதற்குக் காரணம் என்று அமெரிக்க அதிபர் பிடன் உள்ளிட்டோரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடுமையான புடின் எதிர்ப்பாளரான நவல்னி தொடர்ந்து அவருக்கு எதிராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில்தான் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அலெக்ஸி உடல் அடக்கத்திற்கு திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அவரது அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை
விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?
Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
{{comments.comment}}