சாம்பியன்ஸ் டிராபி போட்டின்னு வந்துட்டா.. விராட் கோலிக்கு லட்டு மாதிரி.. என்னா ஆட்டம் பாருங்க!

Feb 19, 2025,06:26 PM IST

டெல்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் விராட் கோலியின் சாதனைகள் இந்தியாவுக்கு நிறைய நல்லது செய்துள்ளது. நாளை இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்தைச் சந்திக்கவுள்ள நிலையில் விராட் கோலியின் சாம்பியன்ஸ் டிராபி அதிரடிகளைப் பற்றிப் பார்க்கலாம்.


2009ம் ஆண்டு தான் முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடினார் விராட் கோலி. அதில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 104 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் அவருக்கு மேன் ஆப் தி மேட்ச் விருதும் கிடைத்தது. அதுதான் அவரது முதல் மேன் ஆப் தி மேட்ச் விருது.


2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அரை இறுதியில் இலங்கைக்கு எதிராக விளையாடிய கோலி 64 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற கோலியும் முக்கியக் காரணமாக இருந்தார்.




2013 இறுதிப் போட்டியில் 34 பந்துகளில் 43 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தார். விராட் கோலி. இப்போட்டியில் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது.


2017 தொடரின் முதல் போட்டியில் 68 பந்துகளில் 81 ரன்களைக் குவித்து பாகிஸ்தானை தோற்கடிக்கக் காரணமாக இருந்தார். இப்போட்டியிலும் விராட் கோலி ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது முக்கியமானது.


2017 தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 101 பந்துகளில் 76 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து இந்தியா, அரை இறுதிக்கு முன்னேற காரணமாக இருந்தார் விராட் கோலி.


அரை இறுதிப் போட்டியில் 96 பந்துகளைச் சந்தித்த கோலி 96 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து வங்கதேசத்தை பந்தாடி இறுதிப் போட்டிக்கு இந்தியாவை இட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


2025 தொடரிலும் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இத்தொடரில் இந்தியா வென்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

மலைகளின் மாநாட்டை தொடர்ந்து... கடல் மாநாடு நடத்த கடலுக்குள் சென்று ஆய்வு செய்த சீமான்!

news

விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

news

வரும் வாரங்களில் விஜய் பிரச்சாரங்களை தவிர்த்து... பொதுக் கூட்டங்களை நடத்தி கொள்ள வேண்டும்: சீமான்

news

கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு

news

கரூர் சம்பவம்..ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்..முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!

news

கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!

news

எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?

அதிகம் பார்க்கும் செய்திகள்