சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு..ஊட்டி சுற்றுலா தலங்கள் முழுவதும் இன்று மூடல்..!

May 27, 2025,11:01 AM IST

ஊட்டி: நீலகிரி, கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படும் என அறிக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, கடந்த மூன்று நாட்களாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. உதகையில் பெய்த மழையால் கல்லட்டி மலைப்பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்து  சாலைகள் சேதமடைந்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் அப்பகுதி மூடப்பட்டது. இதனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அதன்படி உதகையிலிருந்து மசினகுடி செல்லும் அனைத்து வாகனங்களும் கூடலூர் வழியாக  அனுப்பப்பட்டன. 


கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழையால் சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

அதே சமயத்தில் அப்பகுதிகளில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மரக்கிளைகளை வெட்டும் பணிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்த நிலையில் நீலகிரி, கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மேலும் திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 


நீலகிரி, கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால், ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று மூடப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, பைக்காரா, பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா காட்சி முனை, அருவிகள், ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

கல்லறை தேடுகிறது!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை குறைவு.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

Red Alert: மும்பை, தானேயில்.. வெளுத்து வாங்கும் கன மழை.. மக்களே உஷாரா இருங்க!

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

என் நினைவில் ஒரு காதல் அலை.. கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி (2)

news

உலகின் முன்னோடி முதலமைச்சர்கள் மூவர்.. சிவ அறஞானிகள்.. யார் என்று தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 15, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்