தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: மத்திய அமைச்சர் அமித்ஷா

Feb 14, 2026,05:20 PM IST

சென்னை;  உலகின் மிகத் தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜகவும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறது.  அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். இன்று காலை காரைக்காலுக்கு வருகை தந்தார். அங்கு பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.




அப்போது அவர் பேசுகையில்,  திருநள்ளாறு சனீஸ்வரன், பத்ரகாளி அம்மனை வணங்கி உரையைத் தொடங்குகிறேன் . உலகின் மிகத் தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று தனது உரையை ஆரம்பித்தார். மேலும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அமைக்க வேண்டுமா வேண்டாமா என்று பாஜக தொண்டர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும். அன்றாட தாக்குதலை காங்கிரஸ் வாடிக்கையாக மாற்றி இருந்தது. இது குறித்து வாய் திறக்க மாட்டார்கள். 


பிரதமர் மோடி வந்த பிறகு ,முதன்முறையாக புல்வாமா தாக்குதலுக்கு வான் வழியாக பதிலடி தரப்பட்டது. இதனை தொடர்ந்து ஆபரேஷன் சிந்து வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், பிரதமர் மோடியின் முயற்சியால் மலேசியாவில் தமிழுக்கு சிறுபான்மை மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. அடுத்த 5  ஆண்டுகளில் புதுசேரியை  வளர்ச்சி அடைந்ததாக மாற்ற தொடர்ந்து பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிந்தனைச் சிதறல்.. மதிக்காத ஓராயிரம் உறவுகளை விட .. உயிராய் மதிக்கும் ஒரு உறவு போதும்!

news

வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!

news

தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி

news

The candle of my life.. என் வாழ்க்கையின் மெழுகுவர்த்தி

news

There is one thing that matters: your next step.. அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருங்கள்!

news

போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள அமைச்சர்

news

லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!

news

பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்

news

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்