சிந்தனைச் சிதறல்.. மதிக்காத ஓராயிரம் உறவுகளை விட .. உயிராய் மதிக்கும் ஒரு உறவு போதும்!

Jul 15, 2026,02:31 PM IST

- அ.தாமஸ்


நமது உறவுக்கும் உணர்வுக்கும் மதிப்புக் கொடுக்காத ஓராயிரம் உறவுகளை விட நம்மை உயிராய் மதிக்கும் ஒரு உறவு உயர்வானது. 


கடந்து வந்த பாதையில் உடன் நடந்து வந்தவர்களை எல்லாம் நினைவில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக அந்தப் பாதை நமக்கு கற்பித்த பாடங்கள் மட்டுமே அடுத்த நிலை பயணத்திற்கு போதுமானது.




நம்மை மதிக்காத இடத்தில் பெருஞ்சோறு உண்பதை விட நம்மை மதிக்கும் இடத்தில் பழஞ்சோறு உண்பது மேல்.ஆம் உணவை விட உறவும் உறவை விட உணர்வும் உயர்வானது.


நாம் வேண்டும் என்பவர்களை மட்டுமே உறவாய் நினைப்போம். நாம் வேண்டாம் என்பவர்களை உறவு என்று நிலையிலிருந்து அறவே அறுப்போம் இல்லையேல் நினைவிலிருந்து முற்றாய் மறப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள அமைச்சர்

news

நண்பனே வாழ்க பல்லாண்டு!

news

சிந்தனைச் சிதறல்.. மதிக்காத ஓராயிரம் உறவுகளை விட .. உயிராய் மதிக்கும் ஒரு உறவு போதும்!

news

வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!

news

தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி

news

The candle of my life.. என் வாழ்க்கையின் மெழுகுவர்த்தி

news

There is one thing that matters: your next step.. அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருங்கள்!

news

லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!

news

பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்