திருச்சி: திருச்சியில் பாஜக சார்பில் நடந்த மோடி பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்தார். நேற்று, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார்.

அதன்பின்னர், இன்று காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து, திருச்சி மன்னார்புரத்தில் நடைபெறும் மோடி பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நம்ம ஊரு மோடி பொங்கல் என்ற பெயரில் மிக பிரம்மாண்ட அளவில் பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பொங்கல் விழாவில் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். 1008 பொங்கல் பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ்கோயல், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!
Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!
முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!
My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!
{{comments.comment}}