உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

Sep 03, 2025,03:35 PM IST

டில்லி : தமிழக பாஜக.,வில் இருக்கும் உட்கட்சி பூசல்களை சரி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும், தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காகவும் ஆலோசனை நடத்த வருமாறு தமிழக பாஜக தலைவர்களுக்கு டில்லி தலைமை அழைப்பு விடுத்திருந்தது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பின் பேரில் தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பலரும் இன்று காலை அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றனர். நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தர்ராஜன், எல்.முருகன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட அனைவரும் டில்லி புறப்பட்டு சென்றனர்.


ஆனால் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மட்டும் டில்லி செல்லவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது, திருமணங்கள் மற்றும் முக்கிய வேலைகள் இருந்ததால் தான் டில்லிக்கு செல்லவில்லை என்றார். ஆனால் இதில் ஏதோ விவகாரம் இருப்பதாக மீடியாக்களில் தகவல் பரவி வந்தது.




இதற்கிடையில் டில்லியில் அமித்ஷா இல்லத்தில் நடத்த தமிழக பாஜக தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில் தேர்தலுக்கு முன் உட்கட்சியில் இருக்கும் பூசல்களை களைய வேண்டும். தமிழக பாஜக.,வில் உட்கட்சி பூசல் இருப்பது கட்சிக்கு நல்லதல்ல. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் பாஜக நிர்வாகிகள் சிலருக்கு கருத்து முரண்பாடுகள் இருப்பதாக விசாரித்ததில் தெரிய வந்துள்ளது என கூறி உள்ளார்.


இதற்கு முன்பு டில்லியில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திலும் கட்சி தலைமை சார்பில் இதே போன்ற ஒரு மறைமுக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. "தமிழகத்தில் யார் யார் என்ன செய்கிறீர்கள் என்பதை நாங்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம். கட்சியையோ, கூட்டணியையோ பிளவு படுத்தும் வேலைகளில் யாரும் ஈடுபடக் கூடாது. அப்படி செய்தால் அதை பார்த்துக் கொண்டு கட்சி தலைமை சும்மா இருக்காது. தேர்தல் வேலைகளில் மட்டும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.


கூட்டணியை பிளவுபடுத்தும் வகையில் பேசுபவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை விமர்சிப்பவர்களை வேண்டிக்கை பார்த்துக் கொண்டு கட்சி தலைமை இருக்காது. அப்படி செய்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதுடன், அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என பாஜக தலைமை மிக கடுமையாக எச்சரித்துள்ளதாம். அதனால் தான் சமீப காலமாக தமிழக பாஜக.,வில் மாநில தலைவர் என்ற முறையில் நயினார் நாகேந்திரனே பேசி வருகிறார். அவரை தவிர மற்ற யாரும் பெரிதாக கருத்து சொல்லாமல் அமைதி காப்பதற்கு இது தான் காரணம் என பாஜக டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்