சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளில் ஒருவரான பொன்னை பாலுவிற்கு பாதுகாப்பு கேட்டு, அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஐந்தாம் தேதி தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென பத்து பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்த கொலை வழக்கில் பொன்னை பாலு, திருவேங்கடம், அருள், சந்தோஷ், உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவலில் எடுத்து தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடத்தை விசாரணைக்காக போலீசார் நேற்று காலை மாதவரம் ஏரிக்கரைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது திருவேங்கடம் தப்பிக்க முயன்று, துப்பாக்கி சூடு நடத்தி போலீசாரை தாக்கி உள்ளார். உடனே தற்காப்பு கருதி போலீசார் பதிலுக்கு சம்பவ இடத்திலேயே திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட 10 நாட்களில் ஏன் விசாரணைக்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்.. அதன் அவசியம் என்ன.. என எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இது தவிர குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தீர்வாகாது எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இச்சம்பவத்தால் கைது செய்யப்பட்ட மீதமுள்ள குற்றவாளிகளின் உறவினர்கள் கலக்கமடைந்தனர். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளில் ஒருவரான ரவுடி பொன்னை பாலுவை, குற்றவாளி திருவேங்கடம் போல் போலீசார் சுட்டு கொன்று விடக் கூடாது என பாதுகாப்பு கருதி அவரது மனைவி சென்னை மாநகர காவல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}