என்கவுண்டர் அபாயம்.. பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு தேவை.. மனைவி கமிஷனரிடம் மனு

Jul 15, 2024,05:40 PM IST

சென்னை :   பகுஜன் சமாஜ்  கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளில் ஒருவரான பொன்னை பாலுவிற்கு பாதுகாப்பு கேட்டு, அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஐந்தாம் தேதி தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென பத்து பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.




இதனையடுத்து இந்த கொலை வழக்கில் பொன்னை பாலு, திருவேங்கடம், அருள், சந்தோஷ், உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவலில் எடுத்து தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளில் ஒருவரான  திருவேங்கடத்தை விசாரணைக்காக போலீசார் நேற்று காலை மாதவரம் ஏரிக்கரைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது திருவேங்கடம் தப்பிக்க முயன்று,  துப்பாக்கி சூடு நடத்தி போலீசாரை தாக்கி உள்ளார். உடனே தற்காப்பு கருதி  போலீசார் பதிலுக்கு சம்பவ இடத்திலேயே  திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டு  கொல்லப்பட்டார். 


இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட 10 நாட்களில் ஏன் விசாரணைக்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்.. அதன் அவசியம் என்ன.. என எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இது தவிர குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தீர்வாகாது எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இச்சம்பவத்தால் கைது செய்யப்பட்ட மீதமுள்ள குற்றவாளிகளின் உறவினர்கள் கலக்கமடைந்தனர். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளில் ஒருவரான ரவுடி பொன்னை பாலுவை,  குற்றவாளி திருவேங்கடம் போல் போலீசார் சுட்டு கொன்று விடக் கூடாது என பாதுகாப்பு கருதி அவரது மனைவி சென்னை மாநகர காவல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்