சென்னை: வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். நாளை முதல் இதன் தலைவராக அமுதா பொறுப்பேற்கிறார். இவர் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை வானிலை ஆய்வு மையத்தில், தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக பணிபுரிந்தவர் பாலச்சந்திரன். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மூலம் தமிழ்நாட்டின் நான்கு பருவ காலகட்டத்தில் நிலவும் வானிலை தரவுகளை துல்லியமாக ஆராய்ந்து , வானிலை தொடர்பான செய்திகளை அவ்வப்போது பொது மக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்தர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதன் தலைவராக தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.
வடகிழக்குப் பருவமழை தொடர்பான தரவுகளை ஆராய்வதில் முனைவர் பட்டம் பெற்ற அமுதா கடந்த 34 வருடமாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}