சென்னை: வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். நாளை முதல் இதன் தலைவராக அமுதா பொறுப்பேற்கிறார். இவர் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை வானிலை ஆய்வு மையத்தில், தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக பணிபுரிந்தவர் பாலச்சந்திரன். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மூலம் தமிழ்நாட்டின் நான்கு பருவ காலகட்டத்தில் நிலவும் வானிலை தரவுகளை துல்லியமாக ஆராய்ந்து , வானிலை தொடர்பான செய்திகளை அவ்வப்போது பொது மக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்தர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதன் தலைவராக தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.
வடகிழக்குப் பருவமழை தொடர்பான தரவுகளை ஆராய்வதில் முனைவர் பட்டம் பெற்ற அமுதா கடந்த 34 வருடமாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!
புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை: முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவு!
கருவறை முதல் கல்லறை வரை... அலட்சியமும் ஊழலும் மலிந்து போன திமுக அரசு: தவெக
ஸ்வஸ்திக் சின்னம்.. அதிர்ஷ்டம், மங்கலம் மற்றும் செழிப்பின் அடையாளம்!
AI-யிலும் வடிவேலுதான் கிங்கு.. எங்க பார்த்தாலும் அந்தக் குண்டுப் பையன்தான் உருண்டுட்டிருக்கான்!
சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்
அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}