ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 09 .. "தூமணி மாடத்துச் சுற்றும்"

Dec 25, 2023,09:58 AM IST

திருப்பாவை பாசுரம் 09 :


தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,

தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும் 

மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;

மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

'மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.




பொருள் : 


தூய்மையான மணி கட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட மாடம் முழுவதும் விளக்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. இனிய மனங்களை உடைய சாம்பிராணி போன்ற தூபங்களால் மனம் வீசும் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கும் மாமனிதரின் மகளே வந்து உன் வீட்டின் கதவுகளை திற. மாமனிதரின் மனைவியே, அவளை எழுப்பி விடுங்கள். உங்கள் மகள் என்ன பேச முடியாதவளா? அல்லது காது கேட்காதவளா? மந்திரத்தால் மயங்க வைக்கப்பட்டவள் போல் இப்படி தூங்குகிறாளே? மன்னனுக்கு எல்லாம் பெரிய மன்னன், மாதவன், வைகுந்தன் என கண்ணனை நாங்கள் விடாமல் போற்றி பாடிக் கொண்டிருக்கிறோம். அது அவளின் காதுகளில் விழவில்லையா? எழுந்திரு பெண்ணே.


விளக்கம் :


உலக மக்கள் அனைவரும் உலக சுகங்கள், இன்பங்களில் மூழ்கி கிடக்கிறார்கள். அவர்கள் அந்த மாயையில் இருந்து விடுபட முடியாமல், எதற்காக பிறவி எடுத்தோம் என்பதை உணராமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். அவர்களும் உணராமல் மற்றவர்கள், இறைவன் மீது பக்தி செய்வதன் அவசியத்தை எடுத்துச் சொன்னாலும் அதை உணர்ந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்குள் மன மாற்றம் ஏற்பட்டு, அவர்கள் மாயையில் இருந்து விடுபடுவதற்காக தொடர்ந்து இறைவனின் நாமத்தை சொல்லி கொண்டே இருக்க வேண்டும் என விளக்குகிறார் ஆண்டாள்.

சமீபத்திய செய்திகள்

news

புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்