சென்னை: லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 தேர்தல் மேலாண்மை குழுக்களை அறிவித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை .
2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஏப்ரல் மாத வாக்கில் தேர்தல் வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இப்போதே இதற்காக கட்சிகள் தயாராக ஆரம்பித்து விட்டன. திமுக, அதிமுக, பாஜக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
எல்லோருக்கும் முன்பாக தமிழ்நாட்டில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று கோவையில் நடைபெற்றது. இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 தேர்தல் மேலாண்மை குழுக்களை அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாஜகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். 38 குழுக்களின் விவரம் வருமாறு:
தேர்தல் நிர்வாகக் குழு, தேர்தல் அலுவலகம், கால் சென்டர், அலுவலக மேலாண்மை, புரோட்டோகால், மீடியா துறை, மீடியா உறவு, சட்ட விவகாரம், தேர்தல் ஆணையம், இலக்கிய தயாரிப்பு, இலக்கிய உரை அச்சிடுதல், பப்ளிசிட்டி மெட்டீரியல், பப்ளிசிட்டி மெட்டீரியல் - இலக்கிய விநியோகம், வாகனம், சுற்றுப்பயணம், விளம்பர பிரச்சாரம் (டிவி, எப்எம் ரேடியோ, தியேட்டர் விளம்பரங்கள் கேபிள் நெட்வொர்க், டிஜிட்டல் ஸ்கிரீன், பிரின்ட் மீடியா)
வீடியோ வேன்கள், ரிசோர்ஸ், கணக்கு விவகாரம், புள்ளிவிவரம், ஆவணங்கள், தேர்தல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, சோசியல் மீடியா -ஹைடெக் பிரசாரம், டிஜிட்டல் துறை, கலாச்சார பிரச்சாரம், தெரு கூட்டங்கள், கமர்ஷியல் -சோசியல், வெளிநாட்டு தொண்டர்கள், மகளிர் பிரச்சாரம், இளைஞர் பிரச்சாரம், எஸ்சி பிரச்சாரம், எஸ்டி பிரச்சாரம், ஜுக்கி ஜோப்டி பிரச்சாரம், சோசியல் சம்பார்க், லாபரதி சம்பார்க், பூத் பணி, பேசும் பொருட்கள், விஸ்தாரக் யோஜனா.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் எச். ராஜா இடம் பிடித்துள்ளார். மொத்தம் நான்கு பேர் கொண்ட இந்தக் குழுவில், எச். ராஜா, கே.பி ராமலிங்கம், கார்வேந்தன், ராம சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு கட்சிகளும் ஓரிரு குழுக்களை அமைத்துள்ள நிலையில் தமிழ்நாடு பாஜக அதிரடியாக 38 குழுக்களை அமைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}