சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக நடிகர் கமல்ஹாசன் மீது பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கரூர் சென்று நேற்று பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிர்வாகத்தின் மீது தவறு இல்லை என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசும்போது, கரூரில் நடந்தது துயரமான சம்பவம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது சுமத்தக்கூடாது. அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு இது நேரமில்லை. காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்துள்ளனர். அவர்களை விமர்சிக்கக் கூடாது. முதலமைச்சர் மரியாதையுடன் செயல்பட்டுள்ளார். அதைப் பாராட்ட வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.

இதுகுறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். கமல்ஹாசன் ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தனது ஆன்மாவை விற்றுவிட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணாமலை கூறுகையில், கமல்ஹாசன் ஒரு சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அரசியலில் அவர் பேசுவது ஒருதலைப்பட்சமானது. கரூர் சம்பவம் போன்ற விஷயங்களில் கூட திமுகவுக்கு ஆதரவாகவே பேசுகிறார்.
என்னதான் கமல் ஹாசன் பேசினாலும், தமிழ்நாட்டு மக்கள் அவரை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கரூர் சென்று நிர்வாகத்தின் மீது தவறு இல்லை என்று சொன்னால் யார் ஏற்றுக்கொள்வார்கள்? என்றார் அவர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}