கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளி ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை

Oct 06, 2025,06:27 PM IST

சென்னை: கரூர் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது தவறுகள் இருப்பது உண்மைதான். ஆனால் அதற்காக விஜய்யை குற்றவாளி ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இது குறித்து முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், கரூர்  சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டால் அது நிற்காது. விஜய்யை குற்றவாளியாக ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் ஆசைக்காக வேண்டுமானால் விஜய்யை ஓரிரு நாள் கைது செய்து, பின்னர் விடுவிக்கலாம். ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுனை கைது செய்தது போல தான். இது எல்லாம் சின்ன பிள்ளைகள் ஆடுகின்ற ஆட்டத்திற்கு சமம். 


இன்று அரசு உறுதியாக இருக்கிறது என்றால் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெகவின் அடிமட்ட நிர்வாகிகள் யார் பர்மிஷன் வாங்கியது. அவர்கள் சரியாக வாங்கினார்களா இல்லையா? பர்மிஷன் கொடுத்த அதிகாரிகள் சரியாக கொடுத்துள்ளார்களா இல்லையா? என்று விசாரிக்கலாம். தமிழக வெற்றிக்கழகத்தின் மீது தவறுகள் இருக்கு. அவர்கள் அதை சரியாக செய்திருக்க வேண்டும். அதற்காக விஜய் அவர்களை குற்றவாளியாக ஆக்க முடியாது. அதற்கு வாய்ப்போ இல்லை. சிலர் அரசியலுக்காக அதை பேசுகிறார்கள். தவெக நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத அரசு, 




திருமாவளவன் கட்சியில் இருந்து பலர் வேறு வேறு கட்சிகளுக்கு மாறுகின்றனர். அதனால் தான் திருமாவளவன் இவ்வாறு விஜய் மீது குறை கூறுகிறார். விஜய்யை பாஜகவினர் பாதுகாப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. ஏன் என்றால் ஆளும் கட்சி பிறரை நசுக்கு வதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. தவெக தலைவர்களை நசுக்கப்பார்கின்றனர்.  நடவடிக்கை எடுக்கலாம். நசுக்கக்கூடாது. அதற்கு தான் நாங்கள் குறல் கொடுக்கிறோம். திராவிட முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் என்று கூறுவதற்கு என்ன ரைட்ஸ் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்திய பங்குசந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 960 புள்ளிகள் சரிவு!

news

அன்னை தடாதகை!

news

இணையப் பாதுகாப்பு.. நவீன உலகின் வரமா? சாபமா?

news

தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 5ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

திமுக.,வில் ஓபிஎஸ்...தென் மாவட்டங்களில் பலத்தை இழக்கிறதா அதிமுக?

news

திருத்தணி பேருந்து நிலையத்துக்கு ம.பொ.சி பெயரை நீடிக்க வேண்டும்.. சீமான் கோரிக்கை

news

சட்டமன்றத் தேர்தல் 2026: 234 தொகுதிகளிலும் மார்ச் 1ல் கழகச் செயல்வீரர்கள் கூட்டம்: ஆனந்த் அறிவிப்பு!

news

மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி மத்திய பாஜக அரசு வெட்கப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழ் சொல்லின் பெருக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்