கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளி ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை

Oct 06, 2025,06:27 PM IST

சென்னை: கரூர் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது தவறுகள் இருப்பது உண்மைதான். ஆனால் அதற்காக விஜய்யை குற்றவாளி ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இது குறித்து முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், கரூர்  சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டால் அது நிற்காது. விஜய்யை குற்றவாளியாக ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் ஆசைக்காக வேண்டுமானால் விஜய்யை ஓரிரு நாள் கைது செய்து, பின்னர் விடுவிக்கலாம். ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுனை கைது செய்தது போல தான். இது எல்லாம் சின்ன பிள்ளைகள் ஆடுகின்ற ஆட்டத்திற்கு சமம். 


இன்று அரசு உறுதியாக இருக்கிறது என்றால் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெகவின் அடிமட்ட நிர்வாகிகள் யார் பர்மிஷன் வாங்கியது. அவர்கள் சரியாக வாங்கினார்களா இல்லையா? பர்மிஷன் கொடுத்த அதிகாரிகள் சரியாக கொடுத்துள்ளார்களா இல்லையா? என்று விசாரிக்கலாம். தமிழக வெற்றிக்கழகத்தின் மீது தவறுகள் இருக்கு. அவர்கள் அதை சரியாக செய்திருக்க வேண்டும். அதற்காக விஜய் அவர்களை குற்றவாளியாக ஆக்க முடியாது. அதற்கு வாய்ப்போ இல்லை. சிலர் அரசியலுக்காக அதை பேசுகிறார்கள். தவெக நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத அரசு, 




திருமாவளவன் கட்சியில் இருந்து பலர் வேறு வேறு கட்சிகளுக்கு மாறுகின்றனர். அதனால் தான் திருமாவளவன் இவ்வாறு விஜய் மீது குறை கூறுகிறார். விஜய்யை பாஜகவினர் பாதுகாப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. ஏன் என்றால் ஆளும் கட்சி பிறரை நசுக்கு வதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. தவெக தலைவர்களை நசுக்கப்பார்கின்றனர்.  நடவடிக்கை எடுக்கலாம். நசுக்கக்கூடாது. அதற்கு தான் நாங்கள் குறல் கொடுக்கிறோம். திராவிட முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் என்று கூறுவதற்கு என்ன ரைட்ஸ் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டெல்லியில் விஜய்.. கரூர் சம்பவம் தொடர்பாக.. இன்று சிபிஐ விசாரணை

news

கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யிடம் நாளை சம்பவம் செய்யப் போகும் சிபிஐ.. டெல்லியில் விசாரணை

news

தேசத்தின் மானம் காத்த.. தேசியக் கொடிகாத்த குமரனை தெரிந்து கொள்வோமா?

news

கூடாரவல்லியில் கைகூடும் மாங்கல்யம்!

news

குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!

news

வில்லிபுத்தூர் ஆண்டாளும் கூடார வல்லியின் சிறப்புகளும்!

news

தென்றல் காற்று தாலாட்ட.. தென்னங்கீற்று தலையாட்ட... குயிலின் ஓசை இசை பாட.. மழை!

news

இதற்கு மேல்....!

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்