சென்னை: கரூர் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது தவறுகள் இருப்பது உண்மைதான். ஆனால் அதற்காக விஜய்யை குற்றவாளி ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டால் அது நிற்காது. விஜய்யை குற்றவாளியாக ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் ஆசைக்காக வேண்டுமானால் விஜய்யை ஓரிரு நாள் கைது செய்து, பின்னர் விடுவிக்கலாம். ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுனை கைது செய்தது போல தான். இது எல்லாம் சின்ன பிள்ளைகள் ஆடுகின்ற ஆட்டத்திற்கு சமம்.
இன்று அரசு உறுதியாக இருக்கிறது என்றால் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெகவின் அடிமட்ட நிர்வாகிகள் யார் பர்மிஷன் வாங்கியது. அவர்கள் சரியாக வாங்கினார்களா இல்லையா? பர்மிஷன் கொடுத்த அதிகாரிகள் சரியாக கொடுத்துள்ளார்களா இல்லையா? என்று விசாரிக்கலாம். தமிழக வெற்றிக்கழகத்தின் மீது தவறுகள் இருக்கு. அவர்கள் அதை சரியாக செய்திருக்க வேண்டும். அதற்காக விஜய் அவர்களை குற்றவாளியாக ஆக்க முடியாது. அதற்கு வாய்ப்போ இல்லை. சிலர் அரசியலுக்காக அதை பேசுகிறார்கள். தவெக நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத அரசு,
திருமாவளவன் கட்சியில் இருந்து பலர் வேறு வேறு கட்சிகளுக்கு மாறுகின்றனர். அதனால் தான் திருமாவளவன் இவ்வாறு விஜய் மீது குறை கூறுகிறார். விஜய்யை பாஜகவினர் பாதுகாப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. ஏன் என்றால் ஆளும் கட்சி பிறரை நசுக்கு வதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. தவெக தலைவர்களை நசுக்கப்பார்கின்றனர். நடவடிக்கை எடுக்கலாம். நசுக்கக்கூடாது. அதற்கு தான் நாங்கள் குறல் கொடுக்கிறோம். திராவிட முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் என்று கூறுவதற்கு என்ன ரைட்ஸ் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி இழிவான செயல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பீகார் சட்டசபை தேர்தல் 2025.. 2 கட்டமாக நவம்பர் 6, 11 ல் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளி ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை
எத்தனை மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டப்போகுது தெரியுமா.... இதோ வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
டாக்டர் ராமதாஸ் ஐசியூவில் இருப்பதால் பார்க்கவில்லை - அன்புமணி: உடனிருந்து பார்க்கிறேன் - ஜிகே மணி
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஆளுநரின் பேச்சு.. விலாவரியாக விளாசித் தள்ளிய முதல்வர் ஸ்டாலின்.. பொசுக்கென்று பதிலடி தந்த தமிழிசை!
அதிரடி சரவெடி... புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... சவரன் 88,000த்தை கடந்தது
{{comments.comment}}