கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு

Oct 04, 2025,12:57 PM IST

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் மட்டுமே பொறுப்பாளர் அல்ல. மாநில அரசு, காவல்துறை, உள்ளூர் நிர்வாகம் எல்லோருமேதான் கூட்டுப் பொறுப்பு என்று முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அண்ணாமலை அளித்த ஒரு பேட்டியின்போது கூறுகையில், கரூரில் நடந்த துயரச் சம்பவத்துக்கு மாநில அரசு, உள்ளூர் நிர்வாகம், மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆகிய மூன்று தரப்பினருமே பொறுப்பு. இந்தச் சம்பவத்துக்கு மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். உள்ளூர் நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் இந்த உண்மைகளிலிருந்து தப்பிக்க முடியாது. 




இந்த வழக்கில் நடிகர் விஜய் முதன்மைக் குற்றவாளியாக இருக்கக்கூடாது. அவரை முதல் குற்றவாளியாக்க முடியும் என்பதை நான் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. அது நடக்காது.


மாநில அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையத்தை விட, சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீதே அதிக நம்பிக்கை இருக்கிறது. இந்த சம்பவத்தை அரசியல் ரீதியான பழிவாங்கும் செயலாக மாற்றக் கூடாது என்றார் அண்ணாமலை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு

news

கரூர் சம்பவம்..ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்..முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!

news

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்து வரும் தங்கம் விலை... இன்று காலையிலேயே உயர்ந்தது!

news

ஓமன் வாழ் தமிழர்கள் கவனத்திற்கு.. மஸ்கட்டில் தமிழ்நாடு நாள்.. விதம் விதமான போட்டிகள்

news

அரபிக் கடலில் உருவான.. 2025ம் ஆண்டின் முதல் புயல்.. அச்சுறுத்தும் சக்தி.. மும்பைக்கு எச்சரிக்கை!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 04, 2025... இன்று பணவரவு அதிகரிக்கும்

news

கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!

news

எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?

அதிகம் பார்க்கும் செய்திகள்