மும்பை: சர்வதேச பங்குச் சந்தைகளில், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியப் பங்குச்சந்தையில் வாரத்தின் கடைசி நாளான இன்று கரடியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டுமே 1% க்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பேரிடியைக் கொடுத்துள்ளன.
சென்செக்ஸ் 961.42 புள்ளிகள் (1.17%) சரிந்து 81,287.19 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி: 317.90 புள்ளிகள் (1.25%) வீழ்ச்சியடைந்து 25,178.65 என்ற நிலையில் முடிவடைந்தது.

அமெரிக்காவின் என்விடியா (Nvidia) நிறுவனப் பங்குகள் 5% சரிந்தது, உலக அளவில் தொழில்நுட்பத் துறை சார்ந்த பங்குகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது இந்திய ஐடி பங்குகளையும் (IT Stocks) விட்டு வைக்கவில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியச் சந்தையிலிருந்து தொடர்ந்து முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருவது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாதது மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹90.97 என்ற அளவிற்குச் சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
சர்வதேச சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற சூழலும், அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமுமே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம். வரப்போகும் வாரங்களில் சந்தை மீண்டு வர உலகளாவிய காரணிகள் சாதகமாக இருக்க வேண்டும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக வரலாற்றிலேயே முதல் முறை.. முன்னாள் அதிமுக முதல்வர் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்!
திமுக.,வில் ஓபிஎஸ்...தென் மாவட்டங்களில் பலத்தை இழக்கிறதா அதிமுக?
நிச்சயம் திமுக தோற்கும்.. உறுதி செய்து விட்டார் ஓபிஎஸ்.. டாக்டர் தமிழிசை பலே டிவீட்!
சட்டமன்றத் தேர்தல் 2026: 234 தொகுதிகளிலும் மார்ச் 1ல் கழகச் செயல்வீரர்கள் கூட்டம்: ஆனந்த் அறிவிப்பு!
அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்... ஓபிஎஸ் வரவு நல்வரவாகட்டும்: முதல்வர் முக ஸ்டாலின் பதிவு!
நடிகையுடன் விஜய்க்குத் தொடர்பு.. விவாகத்து தர வேண்டும்.. மனைவி சங்கீதா பரபரப்பு வழக்கு
தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 5ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல்!
திருத்தணி பேருந்து நிலையத்துக்கு ம.பொ.சி பெயரை நீடிக்க வேண்டும்.. சீமான் கோரிக்கை
மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி மத்திய பாஜக அரசு வெட்கப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}