இந்திய பங்குசந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 960 புள்ளிகள் சரிவு!

Feb 27, 2026,04:32 PM IST

மும்பை: சர்வதேச பங்குச் சந்தைகளில், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.


இந்தியப் பங்குச்சந்தையில் வாரத்தின் கடைசி நாளான இன்று கரடியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டுமே 1% க்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பேரிடியைக் கொடுத்துள்ளன.


சென்செக்ஸ் 961.42 புள்ளிகள் (1.17%) சரிந்து 81,287.19 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி: 317.90 புள்ளிகள் (1.25%) வீழ்ச்சியடைந்து 25,178.65 என்ற நிலையில் முடிவடைந்தது.




அமெரிக்காவின் என்விடியா (Nvidia) நிறுவனப் பங்குகள் 5% சரிந்தது, உலக அளவில் தொழில்நுட்பத் துறை சார்ந்த பங்குகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது இந்திய ஐடி பங்குகளையும் (IT Stocks) விட்டு வைக்கவில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியச் சந்தையிலிருந்து தொடர்ந்து முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருவது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.


அமெரிக்கா - ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாதது மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹90.97 என்ற அளவிற்குச் சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.


சர்வதேச சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற சூழலும், அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமுமே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம். வரப்போகும் வாரங்களில் சந்தை மீண்டு வர உலகளாவிய காரணிகள் சாதகமாக இருக்க வேண்டும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்