- கவிதா உடையப்பன், சேலம்
சொல்லச் சொல்ல கேட்கவில்லை - வருத்தம்
சொல்லாமல் இருந்தால் தோன்றுமா - திருத்தம்
சொல்லை கோர்த்திடும் புலவர் - விருத்தம்
சொல்லச் சொல்லி கேட்டிடுவார் - விருப்பம்
நற் சொல்லாலே வழங்கிடலாம் - மருத்தம்
சொல்லிழுக்கு படாமல் வாழ்வது - சருத்தம்
என்னவென்று சொல்ல முனைவது - கருத்தம்
சொல்லிற்கு தலையசைத்தால் - புருத்தம்

நெஞ்சில் வைத்த சொல் - இறுக்கம்
சொல்லாத சொல்லிலும் - இரக்கம்
குறளில் சொற்களோ - சுருக்கம்
சொல்லித் தீராத - பொருள் பெருக்கம்
சொல்லிற்கு சொல் மிக - பொருத்தம்
தமிழ் சொற்களின் இடையே உள்ளது - இணக்கம்
இம்மொழியை கேட்கக் கேட்க வருகுதய்யா - மயக்கம்
சொல்லிற்கு இயைந்து செயல்படுகிறது - இயக்கம்
சொல்ல வந்த சொற்களின் - விளக்கம்
சொல்லிவிட்டேன் இல்லை - கலக்கம்
சொல்ல யோசித்தால் வந்துவிடும் - தயக்கம்
சொல்லிவிட்ட பின் வருமையா? - நல்ல உறக்கம்
சொல்வதைக் கேட்பது - நல்ல பழக்கம்
சான்றோர் சொல்லி வைத்தனர் - உரிய வழக்கம்
சொல்லின் வலம், சொற்றொடர்களின் களம்
தமிழோடு வாழ்வதே என்றென்றும் நலம்
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம்!
Idli Podi: இட்லி பொடி.. சுவையான பாரம்பரிய முறையில் எப்படி தயாரிக்கலாம்?
நிழல் மறைந்த நாள்.. தேவகோட்டை மாணவர்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு!
வயதானாலும் நாங்களும் நல்லுள்ளங்களே!
Kalaiarasi Poem: ஆசை !
சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தேறிய பொழில் இலக்கியச் சங்கமம் 2026
ஒரு பக்க கட்டுரை.. முயற்சியின் மந்திரம்!
உலகக் கலை தினம்... World Art Day...!
மதுரை கிழவியை பெருமை செய்ய மண்ணை சுமந்தாய்!
{{comments.comment}}