நள்ளிரவில் கால்வாயை பார்வையிட்டு நாடகமா.. மதுரை மக்கள் என்ன முட்டாள்களா?.. அண்ணாமலை

Jun 01, 2025,01:10 PM IST

சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளாகவே மதுரை பந்தல்குடி கால்வாயை தூர்வார, பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இது வரை கால்வாயை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்காத முதல்வர் மு.க.ஸ்டாலின்,  நேற்று சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு, துணி கட்டி மறைக்கப்பட்டிருந்த செய்தி வெளியாகி, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு வெளியான நிலையில், நள்ளிரவில் கால்வாயைப் பார்வையிடுவதைப் போல் ஒரு நாடகம் நடத்தியிருக்கிறார் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.


மதுரை பந்தல்குடி கால்வாயை திரைச் சீலை கட்டி மூடிய செயல் மதுரையில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. திமுக மீதான விமர்சனத்தையும் இது கொண்டு வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் திரைச்சீலைகளை மக்களே அப்புறப்படுத்தினர். 


இந்த நிலையில் நேற்று அப்பகு வழியாக முதல்வரின் ரோட் ஷோ நடந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் காரை விட்டு இறங்கி கால்வாயைப் பார்வையிட்டு விவரம் கேட்டறிந்தார். பின்னர் துரித கதியில் கால்வாயைத் தூர் வாரவும் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாவுக்கு உத்தரவிட்டார். 




இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த நான்கு ஆண்டுகளாகவே பந்தல்குடி கால்வாயை தூர்வார, பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இது வரை கால்வாயை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், , நேற்று மதுரை பந்தல்குடி கால்வாய், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு, துணி கட்டி மறைக்கப்பட்டிருந்த செய்தி வெளியாகி, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு வெளியான நிலையில், நள்ளிரவில் கால்வாயைப் பார்வையிடுவதைப் போல் ஒரு நாடகம் நடத்தியிருக்கிறார். 


திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்த ஆண்டு, மதுரையில் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, பந்தல்குடி கால்வாயை தூர்வாராமல் இருப்பதும் ஒரு காரணம். இதனையடுத்து, ₹90 கோடி செலவில், கால்வாயை தூர் வாரி, தடுப்புச் சுவர் கட்டப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். ஆனால், இன்று வரை அதற்கும் எந்த நடவடிக்கைகளும் இல்லை. 


நான்கு ஆண்டுகள் கால்வாயை தூர்வார ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் உறங்கிக் கொண்டிருந்த முதலமைச்சர், நள்ளிரவில் சென்று பார்வை இடும் நாடகம் யாரை ஏமாற்ற? இந்த நாடகத்தால் யாருக்கு என்ன பயன்? மதுரை மக்களை என்ன முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? 


கால்வாயை தூர்வார, அமைச்சர் கே.என்.நேரு அறிவித்த ₹90 கோடி திட்டம் என்ன ஆனது? எத்தனை முறைதான் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவீர்கள்? என்று கேட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்

news

நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!

news

பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?

news

தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு

news

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

news

முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்

news

அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி

news

நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்

news

டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்