சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளாகவே மதுரை பந்தல்குடி கால்வாயை தூர்வார, பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இது வரை கால்வாயை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்காத முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு, துணி கட்டி மறைக்கப்பட்டிருந்த செய்தி வெளியாகி, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு வெளியான நிலையில், நள்ளிரவில் கால்வாயைப் பார்வையிடுவதைப் போல் ஒரு நாடகம் நடத்தியிருக்கிறார் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
மதுரை பந்தல்குடி கால்வாயை திரைச் சீலை கட்டி மூடிய செயல் மதுரையில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. திமுக மீதான விமர்சனத்தையும் இது கொண்டு வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் திரைச்சீலைகளை மக்களே அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று அப்பகு வழியாக முதல்வரின் ரோட் ஷோ நடந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் காரை விட்டு இறங்கி கால்வாயைப் பார்வையிட்டு விவரம் கேட்டறிந்தார். பின்னர் துரித கதியில் கால்வாயைத் தூர் வாரவும் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாவுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த நான்கு ஆண்டுகளாகவே பந்தல்குடி கால்வாயை தூர்வார, பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இது வரை கால்வாயை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், , நேற்று மதுரை பந்தல்குடி கால்வாய், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு, துணி கட்டி மறைக்கப்பட்டிருந்த செய்தி வெளியாகி, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு வெளியான நிலையில், நள்ளிரவில் கால்வாயைப் பார்வையிடுவதைப் போல் ஒரு நாடகம் நடத்தியிருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்த ஆண்டு, மதுரையில் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, பந்தல்குடி கால்வாயை தூர்வாராமல் இருப்பதும் ஒரு காரணம். இதனையடுத்து, ₹90 கோடி செலவில், கால்வாயை தூர் வாரி, தடுப்புச் சுவர் கட்டப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். ஆனால், இன்று வரை அதற்கும் எந்த நடவடிக்கைகளும் இல்லை.
நான்கு ஆண்டுகள் கால்வாயை தூர்வார ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் உறங்கிக் கொண்டிருந்த முதலமைச்சர், நள்ளிரவில் சென்று பார்வை இடும் நாடகம் யாரை ஏமாற்ற? இந்த நாடகத்தால் யாருக்கு என்ன பயன்? மதுரை மக்களை என்ன முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா?
கால்வாயை தூர்வார, அமைச்சர் கே.என்.நேரு அறிவித்த ₹90 கோடி திட்டம் என்ன ஆனது? எத்தனை முறைதான் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவீர்கள்? என்று கேட்டுள்ளார்.
Lunch Tips: மதிய உணவில் கண்டிப்பாக மோர் சேர்க்க வேண்டும்.. ஏன் தெரியுமா?
Actually அவங்க நேஹா இல்லையாம்.. போபாலை அதிர வைத்த.. வங்கதேசத்து அப்துல் கலாம்!
ஆஸ்ட்ரோனாமர் சிஇஓ ஆண்டி பைரன் ராஜினாமா.. பெண் எச்ஆர் அதிகாரியுடன் சிக்கி சர்ச்சையானதால் விலகல்!
ஒரே நேரத்தில் அண்ணன் தம்பியை மணந்த பழங்குடியினப் பெண்.. சிம்லாவில் ஆச்சரிய திருமணம்
மகா மோசமாக இருக்கும் மதுரை.. மறு சீரமைப்பு நடவடிக்கை தேவை.. முதல்வருக்கு சு. வெங்கடேசன் கோரிக்கை
ஆபரேஷன் சிந்தூரின்போது.. 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டொனால்ட் டிரம்ப் புதுத் தகவல்
42 நாடுகளுக்குப் போன பிரதமர் மோடி.. மணிப்பூருக்கு மட்டும் செல்லாதது ஏன்.. கார்கே கேள்வி
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... கொடூரனை கைது செய்யாதது தான் அரசின் மிகப்பெரிய வன்கொடுமை: சீமான்!
பொய்யான வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு !
{{comments.comment}}