மீண்டும் ஒரு பெருந்தொற்று வரப் போகிறது.. தவிர்க்க முடியாது.. எச்சரிக்கிறார் இங்கிலாந்து விஞ்ஞானி

May 29, 2024,05:55 PM IST

லண்டன்: கொரோனாவைப் போன்ற ஒரு பெருந்தொற்று உலகைத் தாக்கும். இதைத் தவிர்க்க முடியாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி சர் பாட்ரிக் வாலன்ஸ் எச்சரித்துள்ளார்.


இதுதொடர்பாக இப்போதே இங்கிலாந்து அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார். இங்கிலாந்தில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே புதிதாக வரப் போகும் அரசு இந்தப் பெருந்தொற்றை சமாளிக்கத் தேவையான சவால்களை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் வாலன்ஸ் தெரிவித்துள்ளார்.




முன்கூட்டியே நோய்ப் பரவலைக் கண்டுபிடிப்பது மிக மிக முக்கியம். அதை உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசிகள், சிகிச்சை முறைகளை திட்டமிட வேண்டும். இதை முன்கூட்டியே செய்து விட்டால், கோவிட் 19 சமயத்தில் ஏற்பட்டதைப் போன்ற பெரும் பாதிப்புகளை சமாளிக்க முடியும்.  சர்வதேச அளவிலான ஒத்துழைப்பும் இதில் முக்கியமானது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


நான் 2021ம் ஆண்டே இதுகுறித்துக் கூறியிருந்தேன். ஆனால் 2023ல் நடந்த ஜி7 மாநாட்டில் இதுகுறித்து பேசப்படவே இல்லை. நீங்கள் இந்த பெருந்தொற்று அபாயத்தை தவிர்க்க முடியாது. அதை மறந்து விட்டு வேறு எதையும் திட்டமிடவும் முடியாது என்று அவர் கூறியுள்ளார்.


கொரோனா பெருந்தொற்று இப்போது மட்டுப்பட்டு விட்டது. ஆனாலும் அது இன்னும் முழுமையாக ஒழியவில்லை. ஆங்காங்கே கொரோனா இருந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் புதிய பெருந்தொற்று குறித்து இங்கிலாந்து விஞ்ஞானி எச்சரித்திருப்பது சலசலப்பைக் கிளப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத்.. ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.. முக்கிய கதாபாத்திரத்தில்!

news

சிவகார்த்திகேயன் அம்மாவின் 70வது பிறந்த நாளை எப்படி கொண்டாடி இருக்கார் பாருங்க!

news

சர்வதேச செய்தி நிறுவனங்கள் உள்பட.. 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு!

news

இந்தியாவின் அதிரடியால் ஆட்டம் காணும் பாகிஸ்தான்.. பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி!

news

பாகிஸ்தான் ஏவிய 50 டிரோன்களை தடுத்து அழித்த இந்தியா... வியாழக்கிழமை இரவு நடந்தது என்ன?

news

திருச்சிக்கான புதிய பேருந்து நிலையம்.. பஞ்சப்பூரில் பிரம்மாண்டம்.. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

news

இந்தியா - பாகிஸ்தான் போர்ச் சூழல் எதிரொலி.. ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் சஸ்பெண்ட்: பிசிசிஐ

news

அதிரடித் தாக்குதலில் குதித்த இந்தியா.. பதட்டத்தில் பாகிஸ்தான்.. PSL 2025.. யூஏஇக்கு மாற்றம்!

news

மக்களே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. சண்டிகரில் எச்சரிக்கை சைரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்