டெல்லி: கெளதம் கம்பீரைத் தொடர்ந்து, அவரது பாணியில் இன்னொரு பாஜக எம்.பியும் அரசியல் நடவடிக்கையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். சீட் கிடைக்காது என்ற தகவலால் இவர்கள் அரசியலை விட்டு விலகுவதாக கூறப்படுகிறது.
கிழக்கு டெல்லி லோக்சபா தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கம்பீர். தீவிர பாஜககாரராக செயல்பட்டு வந்தார். ஆனால் இவரது செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு திருப்தி தரவில்லை. இவரால் கட்சிக்கும் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்றும் பலரும் குமுறல் வெளியிட்டு வந்தனர். ஒரு எலைட் தலைவர் போலவே செயல்படுவதாகவும் அதிருப்தி இருந்து வருகிறது.

இந்த நிலையில் வருகிற லோக்சபா தேர்தலில் கம்பீருக்கு மீண்டும் சீட் கிடைக்காது என்று தகவல்கள் கூறுகின்றன. இதனால் அதிருப்தி அடைந்த கெளதம் கம்பீர், தன்னை அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்குமாறு ஜே.பி. நட்டாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இவர் மீண்டும் கிரிக்கெட் பக்கமே போகவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தச் சூழலில் தற்போது இன்னும் ஒரு பாஜக எம்.பியும் தன்னை அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது பெயர் ஜெயந்த் சின்ஹா. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதி எம்.பி. ஆவார். இவர் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், என்னை நேரடி தேர்தல் பணிகளிலிருந்து விடுவிக்குமாறு கட்சித் தலைவர் நட்டாவுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இதன் மூலம் காலநிலை மாற்றம் தொடர்பான முயற்சிகளை நான் கவனம் செலுத்த முடியும். இருப்பினும் கட்சியின் பொருளாதார மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளில் தொடர்ந்து இணைந்திருப்பேன் என்று கூறியுள்ளார் சின்ஹா.
இவருக்கும் டிக்கெட் கிடைக்காது என்ற அனுமானத்தின் அடிப்படையில் தீவிர அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
இந்த முறை பாஜக பல்வேறு புதிய உத்திகளை வேட்பாளர் தேர்வில் கடைப்பிடிக்கிறது. அதாவது ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை அது தேர்வு செய்துள்ளதாம். பல்வேறு ஃபீட்பேக் மூலம் இவர்களைத் தேர்வு செய்துள்ளனர். இதில் யாருக்கு தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறதோ அவர்களுக்கே சீட் கொடுக்கப்படுகிறதாம். முக்கிய வேட்பாளர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு தொகுதியில் நல்ல பெயர் இருந்தால்தான் மீண்டும் சீட் கொடுக்கப்படுமாம். பெயர் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது சர்ச்சை இருந்தாலோ அவர்களுக்கு சீட் கொடுப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.
இதனால் இந்த முறை பல சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என்று பேச்சு அடிபடுகிறது. ஆனால் கட்சியை விட்டோ, கட்சிப் பணிகளை விட்டோ யார் விலகினாலும் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை என்ற முடிவிலும் பாஜக மேலிடம் உள்ளதாம். கட்சிதான் முக்கியம், தனி நபர்கள் அல்ல என்பது கட்சித் தலைமையின் நிலைப்பாடாம்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}