டெல்லி: கெளதம் கம்பீரைத் தொடர்ந்து, அவரது பாணியில் இன்னொரு பாஜக எம்.பியும் அரசியல் நடவடிக்கையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். சீட் கிடைக்காது என்ற தகவலால் இவர்கள் அரசியலை விட்டு விலகுவதாக கூறப்படுகிறது.
கிழக்கு டெல்லி லோக்சபா தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கம்பீர். தீவிர பாஜககாரராக செயல்பட்டு வந்தார். ஆனால் இவரது செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு திருப்தி தரவில்லை. இவரால் கட்சிக்கும் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்றும் பலரும் குமுறல் வெளியிட்டு வந்தனர். ஒரு எலைட் தலைவர் போலவே செயல்படுவதாகவும் அதிருப்தி இருந்து வருகிறது.

இந்த நிலையில் வருகிற லோக்சபா தேர்தலில் கம்பீருக்கு மீண்டும் சீட் கிடைக்காது என்று தகவல்கள் கூறுகின்றன. இதனால் அதிருப்தி அடைந்த கெளதம் கம்பீர், தன்னை அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்குமாறு ஜே.பி. நட்டாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இவர் மீண்டும் கிரிக்கெட் பக்கமே போகவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தச் சூழலில் தற்போது இன்னும் ஒரு பாஜக எம்.பியும் தன்னை அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது பெயர் ஜெயந்த் சின்ஹா. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதி எம்.பி. ஆவார். இவர் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், என்னை நேரடி தேர்தல் பணிகளிலிருந்து விடுவிக்குமாறு கட்சித் தலைவர் நட்டாவுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இதன் மூலம் காலநிலை மாற்றம் தொடர்பான முயற்சிகளை நான் கவனம் செலுத்த முடியும். இருப்பினும் கட்சியின் பொருளாதார மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளில் தொடர்ந்து இணைந்திருப்பேன் என்று கூறியுள்ளார் சின்ஹா.
இவருக்கும் டிக்கெட் கிடைக்காது என்ற அனுமானத்தின் அடிப்படையில் தீவிர அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
இந்த முறை பாஜக பல்வேறு புதிய உத்திகளை வேட்பாளர் தேர்வில் கடைப்பிடிக்கிறது. அதாவது ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை அது தேர்வு செய்துள்ளதாம். பல்வேறு ஃபீட்பேக் மூலம் இவர்களைத் தேர்வு செய்துள்ளனர். இதில் யாருக்கு தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறதோ அவர்களுக்கே சீட் கொடுக்கப்படுகிறதாம். முக்கிய வேட்பாளர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு தொகுதியில் நல்ல பெயர் இருந்தால்தான் மீண்டும் சீட் கொடுக்கப்படுமாம். பெயர் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது சர்ச்சை இருந்தாலோ அவர்களுக்கு சீட் கொடுப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.
இதனால் இந்த முறை பல சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என்று பேச்சு அடிபடுகிறது. ஆனால் கட்சியை விட்டோ, கட்சிப் பணிகளை விட்டோ யார் விலகினாலும் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை என்ற முடிவிலும் பாஜக மேலிடம் உள்ளதாம். கட்சிதான் முக்கியம், தனி நபர்கள் அல்ல என்பது கட்சித் தலைமையின் நிலைப்பாடாம்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}