கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்று கோயம்பத்தூர் விமான நிலையம். தினசரி ஆயிரக்கணக்கானோர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த வாரம் இ மெயில் மூலம் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்தது. ஆனால் போலீஸாரின் சோதனையில் இது புரளி என்று தெரிய வந்தது.

இருப்பினும் மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் பயணிகள் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன. இதையடுத்து வதந்தி என்று உறுதிப்படுத்தப்பட்டதால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுவும் இ மெயில் மூலம் வந்துள்ளது. இதையடுத்து மெட்டல் டிடெக்டர் மூலமும், மோப்ப நாய்கள் மூலமும் விமான நிலையம் முழுமையாக சோதனையிடப்பட்டது. பயணிகளின் உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையம் பரபரப்பானது. இருப்பினும் தற்போது இந்த மிரட்டலும் புரளி என்று தெரியவந்துள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}