கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்று கோயம்பத்தூர் விமான நிலையம். தினசரி ஆயிரக்கணக்கானோர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த வாரம் இ மெயில் மூலம் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்தது. ஆனால் போலீஸாரின் சோதனையில் இது புரளி என்று தெரிய வந்தது.

இருப்பினும் மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் பயணிகள் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன. இதையடுத்து வதந்தி என்று உறுதிப்படுத்தப்பட்டதால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுவும் இ மெயில் மூலம் வந்துள்ளது. இதையடுத்து மெட்டல் டிடெக்டர் மூலமும், மோப்ப நாய்கள் மூலமும் விமான நிலையம் முழுமையாக சோதனையிடப்பட்டது. பயணிகளின் உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையம் பரபரப்பானது. இருப்பினும் தற்போது இந்த மிரட்டலும் புரளி என்று தெரியவந்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}