சென்னை: தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து போலீஸார் மோப்ப நாய்கள் சகிதம் சோதனையில் ஈடுபட்டனர். கடைசியில் அது புரளி என்று தெரிய வந்தது.
சமீப காலமாக பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. குறிப்பாக விஜய் வீட்டுக்கு சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேபோல திரிஷா வீட்டுக்கும் மிரட்டல் வந்தது. நேற்று நயன்தாரா வீட்டுக்கு வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு அடுத்தடுத்து 2 முறை மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து போலீஸார் அவரது நீலாங்கரை வீட்டுக்கு மோப்ப நாய்கள் சகிதம் விரைந்து சென்று சோதனையிட்டனர். சோதனையில் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது.
மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பின் கீழ் விஜய் உள்ளார். சமீபத்தில் அவரது வீட்டுக்குள் ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட நபர் உள்ளே புகுந்து மாடியில் அமர்ந்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது பெரும் பாதுகாப்பு குளறுபடியாக பார்க்கப்பட்டது. இப்போது அடுத்தடுத்து 2 முறை அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}