சென்னை: தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து போலீஸார் மோப்ப நாய்கள் சகிதம் சோதனையில் ஈடுபட்டனர். கடைசியில் அது புரளி என்று தெரிய வந்தது.
சமீப காலமாக பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. குறிப்பாக விஜய் வீட்டுக்கு சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேபோல திரிஷா வீட்டுக்கும் மிரட்டல் வந்தது. நேற்று நயன்தாரா வீட்டுக்கு வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு அடுத்தடுத்து 2 முறை மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து போலீஸார் அவரது நீலாங்கரை வீட்டுக்கு மோப்ப நாய்கள் சகிதம் விரைந்து சென்று சோதனையிட்டனர். சோதனையில் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது.
மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பின் கீழ் விஜய் உள்ளார். சமீபத்தில் அவரது வீட்டுக்குள் ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட நபர் உள்ளே புகுந்து மாடியில் அமர்ந்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது பெரும் பாதுகாப்பு குளறுபடியாக பார்க்கப்பட்டது. இப்போது அடுத்தடுத்து 2 முறை அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் படைத்த புதிய சாதனை: தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அரசு.. நீண்ட கால கனவு நனவானது!
முதல்வர் விஜய் சர்க்கார்.. இளைஞர்கள் நிரம்பிய அமைச்சரவை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இடம்?
புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. செங்கோட்டையன் இலாகா மாற்றம்
அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நிலை.. அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?
தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை
அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடமில்லை!
விஜய் அமைச்சரவை: 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. 3 பெண்களுக்கு இடம்!
சிந்தனைச் சிதறல்.. வாய்ப்புகளுக்காக காத்திருங்கள்.. கிடைத்தால் விடாதீர்கள்
மனிதனின் இரு பக்கங்கள்: பலமும் பலவீனமும்
{{comments.comment}}